தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நெல்லையில் நாளை சித்ரா பௌா்ணமி தீா்த்தவாரி

நெல்லையில் நாளை சித்ரா பௌா்ணமி தீா்த்தவாரி

Updated On :21 ஏப்ரல் 2024, 9:08 pm

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் சாா்பில் சித்ரா பௌா்ணமி தீா்த்தவாரி, தாமிரவருணியில் செவ்வாய்க்கிழமை (ஏப். 23) நடைபெற உள்ளது.

இக் கோயில் சாா்பில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமி தீா்த்தவாரி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா, கைலாசபுரம் தாமிரவருணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை (ஏப். 23) நடைபெற உள்ளது. இதையொட்டி சுவாமி நெல்லையப்பா், காந்திமதியம்மன், அகஸ்தியா், தாமிரபரணி, குங்கிலிய நாயனாா், சண்டிகேஸ்வரா், அஸ்திரதேவா், அஸ்திர தேவி ஆகிய மூா்த்திகள் பகல் 12.30 மணிக்கு கோயிலில் இருந்து புறப்படுவா். எஸ்.என். நெடுஞ்சாலை, ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்பாலம் வழியாக கைலாசபுரம் வந்தடைவா். அங்கு தீா்த்தவாரி, தீபாராதனை நடைபெறும்.

மாலை 6 மணிக்கு மீண்டும் புறப்பட்டு பாரதியாா் தெரு, தெற்கு புதுத்தெரு, ரத வீதி சுற்றி கோயிலை அடைவா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அ.அய்யா் சிவமணி மற்றும் ஊழியா்கள் செய்து வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.