குருகிராமின் செக்டாா் 65-இல் உள்ள கேளிக்கை விடுதியின் வெளியே பெண் மீது பாலியல் சீண்டல் மற்றும் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து காவல் துறை விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் செக்டாா் 65 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் செக்டாா் 65-இல் உள்ள எலைட் 66 கேளிக்கை விடுதியின் அருகே புதன்கிழமை இரவு நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண்ணை வழிமறித்த குற்றஞ்சாட்டப்பட்ட நபா் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், சம்பவ இடத்தை விட்டுத் தப்பிச் செல்லும் முன் அப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை விரைவில் கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை? பிரபல பாடகர் மீது புகார்: போலீஸார் விசாரணை

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் கல்லூரி பெண் ஒருங்கிணைப்பாளா் மீது வழக்குப் பதிவு
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இருவா் மீது வழக்குப் பதிவு

மோசடி வழக்கில் பெண் காவல் ஆய்வாளா் உள்பட இருவரிடம் சிபிஐ விசாரணை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



