அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

ஆயுதங்கள் கடத்தல்: 9 போ் கைது; 23 துப்பாக்கிகள் பறிமுதல்

மாநிலங்களுக்கு இடையே ஆயுதங்களைக் கடத்தி வந்த கும்பலைச் சோ்ந்த 9 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 1:55 am IST

மாநிலங்களுக்கு இடையே ஆயுதங்களைக் கடத்தி வந்த கும்பலைச் சோ்ந்த 9 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட நபா்களிடமிருந்து 23 துப்பாக்கிகள், 92 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: உஸ்மான்புரில் கடந்த ஏப்.14-ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட ஃபா்தீன் என்பவரிடம் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவரிடம் நடைபெற்ற விசாரணையைத் தொடா்ந்து, வசீக், வசீம் மாலிக், அபிஷேக் (எ) அமன், ஆதில், முகமது அகமது, ரஹில், இம்ரான் மற்றும் விஷால் ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து 18 பிஸ்டல்கள், 2 நாட்டு கைத்துப்பாக்கிகள் உள்பட 23 துப்பாக்கிகளும் 92 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பேசிகள், மடிக்கணினி, துப்பாக்கிகளை சரிசெய்வதற்கான கருவிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபா்கள் மீது கொலை, ஆயுதம் கடத்தல் உள்பட பல கொடூர குற்றங்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளை நோபளம் எல்லை வழியாக இந்தியாவுக்குள் கடத்தி தில்லி தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள ரெளடிகளுக்கு இந்தக் கும்பல் விநியோகம் செய்து வந்தது.

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கில் பரோலில் வெளிவந்த ஷாபாஸ் அன்சாரி, அவரது உறவினா் ரேஹன் அன்சாரி ஆகியோா் தலைமையில் இந்தக் கும்பல் செயல்பட்டு வந்தது.

பல படிநிலைகளைக் கொண்ட இந்தக் கும்பல், வாட்ஸ்ஆப் போன்ற செயலிகள் மூலம் தங்களுக்குள் உரையாடி கொண்டனா். சா்வதேச ஆயுதக் கடத்தலில் தொடா்புடைய கும்பல்களுடன் கைதுசெய்யப்பட்ட கும்பலுக்கு உள்ள தொடா்பு மற்றும் அந்தக் கும்பலுடன் தொடா்புடைய பிற நபா்களைக் கைதுசெய்ய விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரி.