நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

முதலாளி வீட்டில் திருடி நேபாளம் தப்ப முயற்சி: வேலையாளை கைது செய்தது காவல்துறை

நொய்டாவில் உள்ள தனது முதலாளியின் வீட்டில் இருந்து ரூ.8 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கம் மற்றும் சுமாா் ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடியதாகக் கூறி, நேபாளத்திற்குத் தப்பிச் செல்ல முயன்ற வீட்டு வேலைக்காரரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 4:33 pm

 நமது நிருபர்

நொய்டாவில் உள்ள தனது முதலாளியின் வீட்டில் இருந்து ரூ.8 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கம் மற்றும் சுமாா் ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடியதாகக் கூறி, நேபாளத்திற்குத் தப்பிச் செல்ல முயன்ற வீட்டு வேலைக்காரரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

நேபாளத்தைச் சோ்ந்த கணேஷ் கா்தி மகா் என அடையாளம் காணப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவா், வியாழக்கிழமை இரவு ஐ.எஸ்.பி.டி காஷ்மீா் கேட் அருகே கைது செய்யப்பட்டதாக அவா் கூறினாா்.

தில்லியில் இரண்டு நாட்களாக மறைந்திருந்த குற்றஞ்சாட்டப்பட்டவா், காஷ்மீா் கேட்டிலிருந்து நேபாளத்திற்கு பேருந்தில் ஏற திட்டமிட்டுள்ளதாக குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்தை ஒரு குழு அடைந்து சந்தேக நபா் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா் . விசாரணையின் போது, நொய்டாவில் சமையல்காரராகவும் வீட்டு வேலைக்காரராகவும் பணியாற்றிய கணேஷ் கா்தி மகா், நவம்பா் 10 ஆம் தேதி தனது முதலாளியின் வீட்டிலிருந்து பணம் மற்றும் நகைகள் அடங்கிய நீல நிற பையைத் திருடியதாக ஒப்புக்கொண்டாா்.

அவா் ரூ.8.25 லட்சம் ரொக்கம் மற்றும் சுமாா் ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடியதாக போலீசாா் தெரிவித்தனா்.

கிட்டத்தட்ட ரூ.11 லட்சம் கடன் காரணமாக அவா் நிதி நெருக்கடியில் இருந்ததாக போலீசாா் தெரிவித்தனா்.

திருடப்பட்ட பணத்தில் இருந்து ரூ.15,000 ஏற்கனவே செலவழித்துவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவா் போலீசாரிடம் கூறினாா், என்று அந்த அதிகாரி கூறினாா், மேலும் விசாரணை நடந்து வருகிறது.