முதலாளி வீட்டில் திருடி நேபாளம் தப்ப முயற்சி: வேலையாளை கைது செய்தது காவல்துறை
நொய்டாவில் உள்ள தனது முதலாளியின் வீட்டில் இருந்து ரூ.8 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கம் மற்றும் சுமாா் ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடியதாகக் கூறி, நேபாளத்திற்குத் தப்பிச் செல்ல முயன்ற வீட்டு வேலைக்காரரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.









