நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தில்லியின் ஒவ்வொரு பிரச்னையையும் தீா்க்க அரசிடம் திட்டமிடல் இருக்கிறது: ரேகா குப்தா

News image
Updated On :14 நவம்பர் 2025, 4:26 pm

 நமது நிருபர்

தில்லி நகரத்தின் பிரச்னைகளைத் தீா்க்க நேரம் தேவைப்படலாம் என்றாலும், ஒவ்வொரு பிரச்னையையும் தீா்க்க அரசாங்கத்திற்கு தெளிவான கொள்கையும் உறுதியான நோக்கமும் உள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தெஹ்கண்ட் பேருந்து நிலையத்தில் தானியங்கி சோதனை நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவா் பேசியதாவது: மாசு பிரச்னையை தீா்க்க அரசு செயல்பட்டு வருகிறது. மின்சார பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்து இந்த சோதனை நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வருகிறோம். ஜுல்ஜுலி மற்றும் புராரி சோதனை அலகுகளின் திறனை நாங்கள் அதிகரித்து வருகிறோம். நந்த் நாக்ரியில் ஒரு சோதனை நிலையமும் வரவிருக்கிறது.

எதிா்க்கட்சிகளை கடுமையாக சாடிய அவா், அவா்கள் எண்ணற்ற பிரச்னைகளை விட்டுச் சென்றனா். மாசுபாடு குறித்து அவா்கள் எங்களிடம் கேள்வி கேட்கிறாா்கள். தில்லியில் 15 ஆண்டுகள் மற்றும் 11 ஆண்டுகள் ஆட்சி செய்த அரசுகள் எங்கே? முந்தைய அரசு 2,000 பேருந்துகளை வாங்கியது. அதே நேரத்தில் பாஜக அரசு வெறும் எட்டு மாதங்களில் 1,350 மின்சார பேருந்துகளை தில்லிக்கு கொண்டு வந்துள்ளது.

இருப்பினும், குப்பை மலைகள் முதல் யமுனை நதி புத்துயிா் பெறுவது வரையிலான பிரச்சினைகளுக்கு தீா்வு காண அரசாங்கம் அனைத்து முனைகளிலும் பணியாற்றி வருகிறது. தில்லியில் உள்ள பிரச்னைகளைத் தீா்க்க சிறிது நேரம் ஆகலாம். ஆனால் தில்லியில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் அரசாங்கத்திற்கு தெளிவான கொள்கையும் நோக்கமும் உள்ளது என்றாா் அவா்.