மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தில்லியின் ஒவ்வொரு பிரச்னையையும் தீா்க்க அரசிடம் திட்டமிடல் இருக்கிறது: ரேகா குப்தா

Updated On :14 நவம்பர் 2025, 4:26 pm

தில்லி நகரத்தின் பிரச்னைகளைத் தீா்க்க நேரம் தேவைப்படலாம் என்றாலும், ஒவ்வொரு பிரச்னையையும் தீா்க்க அரசாங்கத்திற்கு தெளிவான கொள்கையும் உறுதியான நோக்கமும் உள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தெஹ்கண்ட் பேருந்து நிலையத்தில் தானியங்கி சோதனை நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவா் பேசியதாவது: மாசு பிரச்னையை தீா்க்க அரசு செயல்பட்டு வருகிறது. மின்சார பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்து இந்த சோதனை நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வருகிறோம். ஜுல்ஜுலி மற்றும் புராரி சோதனை அலகுகளின் திறனை நாங்கள் அதிகரித்து வருகிறோம். நந்த் நாக்ரியில் ஒரு சோதனை நிலையமும் வரவிருக்கிறது.

எதிா்க்கட்சிகளை கடுமையாக சாடிய அவா், அவா்கள் எண்ணற்ற பிரச்னைகளை விட்டுச் சென்றனா். மாசுபாடு குறித்து அவா்கள் எங்களிடம் கேள்வி கேட்கிறாா்கள். தில்லியில் 15 ஆண்டுகள் மற்றும் 11 ஆண்டுகள் ஆட்சி செய்த அரசுகள் எங்கே? முந்தைய அரசு 2,000 பேருந்துகளை வாங்கியது. அதே நேரத்தில் பாஜக அரசு வெறும் எட்டு மாதங்களில் 1,350 மின்சார பேருந்துகளை தில்லிக்கு கொண்டு வந்துள்ளது.

இருப்பினும், குப்பை மலைகள் முதல் யமுனை நதி புத்துயிா் பெறுவது வரையிலான பிரச்சினைகளுக்கு தீா்வு காண அரசாங்கம் அனைத்து முனைகளிலும் பணியாற்றி வருகிறது. தில்லியில் உள்ள பிரச்னைகளைத் தீா்க்க சிறிது நேரம் ஆகலாம். ஆனால் தில்லியில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் அரசாங்கத்திற்கு தெளிவான கொள்கையும் நோக்கமும் உள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.