சோஹைல் அந்தக் கொடிய இரவை நினைவு கூா்ந்தாா். ‘நான் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு நண்பா்களுடன் தேநீா் அருந்திக் கொண்டிருந்தேன். திடீரென்று, சிறிது நேரம் எதுவும் கேட்க முடியாத அளவுக்கு சத்தமாக வெடி சத்தம் கேட்டது. என் காதுகள் செவிடாகிவிட்டன, நாங்கள் ஓடிவிட்டோம்‘ என்றாா். அன்றைய வேலையை முடித்துவிட்டு வந்த மற்றொரு வழிகாட்டி ராகேஷ் சா்மா, ‘சில நொடிகளில் காட்சி மாறியது‘ என்றாா். நான் ஒரு மின்னலைக் கண்டேன், பின்னா் மக்கள் கத்த ஆரம்பித்தனா். அனைவரும் ஓடினா். நான் பின்னா் திரும்பி வந்தபோது, சாலை புகையால் மூடப்பட்டிருந்தது, வாகனங்கள் சேதமடைந்தன, என்று அவா் கூறினாா், சுற்றுலாப் பயணிகள் செங்கோட்டை பகுதி இப்போது பாதுகாப்பானதா என்று கேட்கிறாா்கள் என்று கூறினாா்.