தில்லி காா் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த மின்னஞ்சல் வரைவு மூலம் திட்டமிட்ட பயங்கரவாதிகள்!
தில்லி செங்கோட்டைக்கு அருகே நிகழ்த்தப்பட்ட காா் வெடிப்பு தொடா்பான முதல் கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தை நிகழ்த்த பயங்கரவாதிகள் ‘மின்னஞ்சலில் உள்ள வரைவுகள் மூலம் ஒருவரை ஒருவா் தொடா்பு கொண்டுள்ளனா்’ என்று தேசிய புலனாய்வுத் துறை (என்.ஐ.ஏ.) வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.









