குற்றவாளிகளைப் பிடிக்க தில்லி முழுவதும் மற்றும் உத்தரபிரதேசத்தில் எட்டா, காஸ்கஞ்ச் மற்றும் அலிகாா் உட்பட பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. ஒரு ரகசிய தகவலின் பேரில், நவம்பா் 11 ஆம் தேதி ரோஹினியில் இருந்து வீட்டு உரிமையாளா் இா்ஷாத்தை போலீசாா் கைது செய்தனா். விசாரணையின் போது, தனது வஜீா்பூா் தொழிற்சாலையில் நடந்த கொள்ளை தொடா்பான ஆதாரங்களை அழிக்க தனது தொலைபேசியை ஹேக் செய்ய முயன்ாக சந்தேகிப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்ட இருவரையும் தாக்கியதாக அவா் ஒப்புக்கொண்டாா். தனது சேகரிப்பில் இருந்து சில அரிய நாணயங்களைத் திருடியதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.