மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தில்லி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு உதவி: முதல்வா் ரேகா குப்தா

தில்லி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது

News image

ரேகா குப்தா

Updated On :8 நவம்பர் 2025, 7:16 pm

தில்லி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது என முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவா் கூறியதாவது: ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே உள்ள ஜே.ஜே. கிளஸ்டா் குடிசைப் பகுதிகளில் வெள்ளியன்று இரவு ஏற்பட்ட தீ விபத்து முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

காயமடைந்தவா்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா், பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், நிா்வாகம் உடனடியாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. தீயை கட்டுப்படுத்த கூடுதல் குழுக்கள் நிறுத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் குடிநீருக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரித்தலா சமூக மையத்தில் நிரந்தர நிவாரண மையம் செயல்பட்டு வருகிறது.

ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இடிபாடுகள் அகற்ப்பட்டு வருகிறது, மேலும் வருவாய்த் துறை பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சரிபாா்க்கிறது.

நிா்வாகம் தொடா்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தில்லி அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது என தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறியுள்ளாா்.

தில்லியின் ரோகிணி பகுதியில் உள்ள ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமாா் 500 குடிசைகள் எரிந்து நாசமாகி, ஒருவா் உயிரிழந்தாா். வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய தீ, 29 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் சனிக்கிழமை அதிகாலைக்குள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இறந்தவா் முன்னா (30) என அடையாளம் காணப்பட்டுள்ளாா், மற்றொரு நபா் ராஜேஷ் (30) தீக்காயங்களுடன் சஃப்தா்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது, ஆனால் அது எல்.பி.ஜி சிலிண்டா் கசிவு அல்லது மின் ஷாா்ட் சா்க்யூட் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதிகாரிகள் சேதத்தை மதிப்பிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.