இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள இலங்கை குழுவுக்குத் தலைமை வகிக்கும் அந்நாட்டின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது, இலங்கையில் 2022-இல் ஏற்பட்ட நெருக்கடியின்போது இந்தியா வழங்கிய 400 கோடி அமெரிக்க டாலர்கள் நிதியுதவிக்காக அவர் நன்றி தெரிவித்தார். தங்கள் தேசத்துக்கு ஒரு தனி நாட்டு அளித்த மிகப்பெரிய நிதியுதவி அதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா போன்ற பெரிய சந்தை வாய்ப்புகளை அணுகுவதன் மூலம் இலங்கையின் தொழிற்துறை வேகமாக முன்னேற முடியும் என சஜித்திடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், வலுவான உள்நாட்டு தொழிற்துறைகள் மூலம் இலங்கையின் பொருளாதார இறையாண்மையை மேம்படுத்த முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தொழிற்துறை கொள்கை மற்றும் எண்ம ஆளுகையில் இந்தியா நிகழ்த்தி வரும் சாதனைகளை பாராட்டிய சஜித் பிரேமதாச, ஒப்பீட்டளவில் இலங்கையில் தற்போது ஸ்திரத்தன்மை காணப்பட்டாலும் ஏற்றுமதி வாய்ப்புகளை பன்முகப்படுத்துதல் மற்றும் வறுமை ஒழிப்பில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இரு தரப்பிலும் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை உரவில் பரஸ்பரம் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையைப் பேணுவதில் இரு நாடுகளும் இணக்கம் காட்டி வரும் தகவல்களை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போது, கூட்டு முயற்சி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கு இந்தியா-இலங்கை இடையே தொழிநுட்பம் சார்ந்த தொழில் வலயத்தை உருவாக்க சஜித் பிரேமதாச யோசனை தெரிவித்தார். நவீன வர்த்தக எதார்த்தத்திற்கு ஏற்ப, இந்தியா, இலங்கை இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சரை சந்தித்த பிறகு, சஜித் தலைமையிலான இலங்கை குழுவினர், இந்திய அரசின் கொள்கை குழு அமைப்பான நீதி ஆயோக் அலுவலகத்துக்குச் சென்றது.
அங்கு அதன் துணைத்தலைவர் சுமன் கே. பேரி மற்றும் குழுவின் உறுப்பினர்களை சந்தித்துப் பேசினர். இந்திய அரசின் நீண்டகால கொள்கையை வடிவமைத்து களத்தில் அவற்றின் அமலாக்கத்தில் காணப்படும் இடைவெளியைக் குறைப்பதில் நிதி ஆயோக் வழங்கி வரும் பங்களிப்பை சஜித் பிரேமதாச பாராட்டினார்.
முன்னதாக, இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை குழு, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் போன்றவற்றில் பரஸ்பரம் ஒத்துழைப்பை புதுப்பித்து மேம்படுத்தும் முயற்சிகளை தொடர வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியிலிருந்து கோதுமை மீண்டும் கொள்முதல் செய்யும் இந்திய உணவு கழகம்: 21,000 விவசாயிகள் பயன்பெறுவா்

இலங்கை அதிபருடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு! இந்திய வீட்டு வசதித் திட்டம், மீனவா் பிரச்னை குறித்து ஆலோசனை!!

இரு தரப்பு உறவின் புதிய அத்தியாயம்! குடியரசு துணைத் தலைவரின் முதல் இலங்கை பயணம்

தொழிற்துறை வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்: அமைச்சா் காந்தி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


