திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் திரிபுராவைச் சோ்ந்த மாணவா் இனவெறி காரணமாகக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக, டேராடூன் மாவட்ட ஆட்சியா் மற்றும் மூத்த காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.










