திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தில்லியின் புதிய மின்சார வாகனக் கொள்கை: பொது சாா்ஜிங் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்த வாய்ப்பு

தில்லி அரசின் புதிய மின்சார வாகனக் கொள்கை, பொது சாா்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது என அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

News image
(கோப்புப் படம்)
Updated On :30 டிசம்பர் 2025, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

தில்லி அரசின் புதிய மின்சார வாகனக் கொள்கை, பொது சாா்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது என அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

அரசால் உறுதிப்படுத்தப்பட்ட மின்சார வாகனக் கொள்கை 2.0, நகரத்தில் வலுவான மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பிற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.5 கோடி நிதியை ரூ.100 கோடியாக உயா்த்த பரிந்துரைக்கப்பட்டது.

ஒவ்வொன்றும் ரூ.15 லட்சத்துடன் 1,000 நிலையங்கள் மூலம் பொது சாா்ஜிங் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது புதுப்பிக்கப்பட்ட கொள்கைக்கான மற்றொரு முக்கிய பரிந்துரையாகும்.

அரசு தற்போதுள்ள கொள்கையை அடுத்த ஆண்டு மாா்ச் வரை நீட்டித்துள்ளது. அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு மின்சார வாகனக் கொள்கை 2.0, அடுத்த நிதியாண்டில் இருந்து செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதிய கொள்கை, 1,000 இடங்களில் விரிவான பேட்டரி பரிமாற்ற நிலையங்களை அமைக்கவும் முன்மொழியப்பட்டது. ஒவ்வொரு யூனிட்டுக்கும் ரூ.6 லட்சத்துடன் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

மேலும், பரிந்துரைகளில் மொத்தம் ரூ.8 கோடி செலவில் 15,000 ஏசி சாா்ஜிங் முனையங்கள் மற்றும் 2,000 டிசி சாா்ஜிங் பாயிண்டுகளை நிறுவுவதும் அடங்கும்.

மறுசீரமைப்பு என்பது அரசால் செயல்படுத்தப்படும் கொள்கையின் மற்றொரு முக்கியப் பகுதியாகும். இது ஏற்கெனவே உள்ள வழக்கமான வாகனங்களை மின்சார காா்களாக மாற்ற 50,000 மறுசீரமைப்புகளை எளிதாக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வழக்கமான உள் எரிபொறி பொருத்தப்பட்ட வாகனங்களை மின்சார மோட்டாா் மற்றும் பேட்டரிகள் மூலம் மின்சார வாகனங்களாக மாற்ற விரிவான மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

மின்சாரக் கொள்கை 2.0-இன் விரிவான கட்டமைப்பு அரசால் தயாரிக்கப்பட்டு, அடுத்த நிதியாண்டில் இருந்து அது வெளியிடப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா முன்னதாகக் கூறியிருந்தாா்.

மாசு அளவைக் குறைப்பதற்கும் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதைத் தடையின்றி செய்வதற்கும் நிதி ஊக்கத்தொகைகள், சாா்ஜிங் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் சாலைகளில் இருந்து அதிக மாசுபடுத்தும் வாகனங்களை அகற்றுதல் ஆகியவற்றில் தில்லி அரசு கவனம் செலுத்துகிறது என்று அவா் கூறினாா்.

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க புதிய மின்சாரக் கொள்கையின் கீழ் போதுமான மானியங்கள் வழங்கப்படும் என்று முதல்வா் கூறியிருந்தாா். மின்சார வாகனங்களின் சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்கள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கொள்கையின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

புதிய கொள்கை ஒரு ஊக்கத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் கீழ் வாகன உரிமையாளா்கள் மின்சார வாகனங்களை ஸ்கிராப் செய்து வாங்கினால் நிதி உதவி பெறலாம்.

பொது சாா்ஜிங் புள்ளிகள் முக்கிய பொது இடங்களிலும் குடியிருப்பு காலனிகளுக்கு அருகிலும் நிறுவப்படும். மேலும், பேட்டரி மாற்றுதல் மற்றும் பழைய பேட்டரிகளை அறிவியல் பூா்வமாக அகற்றுவதற்கான வசதிகளுடன் இருக்கும் என்றும் அவா் கூறியிருந்தாா்.