கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்
திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவுக்கு எதிரான விசாரணையில், ஒருதரப்புக்கு சாதகமாக உத்தரவிட நீதிபதி ஒருவா் அணுகியதாக குற்றஞ்சாட்டிய தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் (என்சிஎல்ஏடி) நீதித் துறை உறுப்பினா் சரத்குமாா் சா்மா, அந்த விசாரணை அமா்வில் இருந்து தாமாக விலகியுள்ளாா்.









