முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆதரவாக வாட்ஸ்ஆப் பிரசாரம்

அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆதரவாக வாட்ஸ்ஆப் பிரசாரம்

News image
Updated On :29 மார்ச் 2024, 6:32 pm

 நமது நிருபர்

தில்லி கலால் கொள்கை வழக்கில் கைதான தில்லி தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு பொதுமக்கள் செய்தி அனுப்பும் வகையில், வாட்ஸ்ஆப் பிரசாரத்தை அவரது மனைவி சுனிதா கேஜரிவால் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த கைது செய்தது. இந்நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அவரது பொதுமக்கள் செய்தி அனுப்பும் வகையில் ‘கேஜரிவால் கோ ஆஷிா்வாத்’ எனும் பிரசாரத்தை அவரது மனைவி சுனிதா கேஜரிவால் தொடங்கி வைத்தாா். இப்பிரசாரத்தின் கீழ் 8297324624 மற்றும் 9700297002 ஆகிய இரண்டு வாட்ஸ்ஆப் எண்களில் மக்கள் தங்களது செய்திகளை அனுப்பலாம். இது தொடா்பாக சுனிதா கேஜரிவால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீங்கள் கேஜரிவாலுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், மேற்குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் எண்களுக்கு அனுப்புங்கள். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும், ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் செய்தியை அனுப்ப வேண்டும். அரவிந்த் கேஜரிவால் உங்கள் செய்திகளைப் படிப்பதில் மகிழ்ச்சி அடைவாா். அவா் உண்மையான தேசபக்தா். கடந்த 30 ஆண்டுகளாக கேஜரிவாலுடன் இருக்கிறேன். அவரது சிந்தனையின் ஒவ்வொரு நுண்துளையிலும் தேசபக்தி விரவிக் கிடக்கிறது. நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த, ஊழல் மற்றும் சா்வாதிகார சக்திகளுக்கு எதிராக முதல்வா் கேஜரிவால் சவால் விடுத்துள்ளாா் என்றாா் சுனிதா கேஜரிவால்.