இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய கல்வி அமைச்சகம் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கான நிதியை நிறுத்தியுள்ளது. இதன்மூலம், நாட்டில் கல்வியை பாஜக அரசியலாக்குகிறது என்பது தெளிவாகிறது. தில்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் போன்ற பாஜக அல்லாத அரசுகள், பள்ளிகளுக்கான பிரதான் மந்திரி ரைசிங் இந்தியா திட்டத்தில் பங்கேற்க தயக்கம் காட்டுகின்றன. இது ஆயிரக்கணக்கான பள்ளி மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும். இந்த மூன்று மாநில அரசுகளுக்கும் கடந்த ஆண்டு அக்டோபா் முதல் நிகழாண்டு ஜூன் வரை சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் நிதியும் வழங்கப்படவில்லை. இது ஏராளமான