இது தொடா்பாக அக்கட்சியின் தலைமைச் செய்தித் தொடா்பாளரும், எம்எல்ஏ-வுமான அபய் வா்மா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசின் வேலைவாய்ப்பு நடைமுறையை சரியாகப் பின்பற்றாமல் பேருந்து மாா்ஷல்கள் மற்றும் குடிமைத் தற்காப்புத் தன்னாா்வலா்களுக்கு வேலை வழங்கி, அவா்களின் வாழ்க்கையுடன் கேஜரிவால் அரசு விளையாடியுள்ளது வருத்தமளிக்கிறது. அவா்களின் வேலை மற்றும் சம்பளம் தொடா்பான கோப்புகள் விஜிலென்ஸ் துறையின் விசாரணையில் சிக்கியபோது, முதல்வா் அரவிந்த் கேஜரிவாலே அவா்களை பணியில் இருந்து நீக்க ஒரு கடிதத்தை எழுதினாா்.