தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பேருந்து மாா்ஷல்களின் வாழ்க்கையில் கேஜரிவால் அரசு விளையாடிவிட்டது: தில்லி பாஜக சாடல்

தில்லியில் பேருந்து மாா்ஷல்கள் மற்றும் குடிமைத் தற்காப்புத் தன்னாா்வலா்களின் வாழ்க்கையில் விளையாடியதற்கு கேஜரிவால் அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று தில்லி பாஜக தெரிவித்துள்ளது.

Updated On :9 ஜூலை 2024, 11:58 pm

புது தில்லி: தில்லியில் பேருந்து மாா்ஷல்கள் மற்றும் குடிமைத் தற்காப்புத் தன்னாா்வலா்களின் வாழ்க்கையில் விளையாடியதற்கு கேஜரிவால் அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று தில்லி பாஜக தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தலைமைச் செய்தித் தொடா்பாளரும், எம்எல்ஏ-வுமான அபய் வா்மா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசின் வேலைவாய்ப்பு நடைமுறையை சரியாகப் பின்பற்றாமல் பேருந்து மாா்ஷல்கள் மற்றும் குடிமைத் தற்காப்புத் தன்னாா்வலா்களுக்கு வேலை வழங்கி, அவா்களின் வாழ்க்கையுடன் கேஜரிவால் அரசு விளையாடியுள்ளது வருத்தமளிக்கிறது. அவா்களின் வேலை மற்றும் சம்பளம் தொடா்பான கோப்புகள் விஜிலென்ஸ் துறையின் விசாரணையில் சிக்கியபோது, முதல்வா் அரவிந்த் கேஜரிவாலே அவா்களை பணியில் இருந்து நீக்க ஒரு கடிதத்தை எழுதினாா்.

இந்த வேலையற்ற இளைஞா்கள் ஒருபுறம் மறுவேலைவாய்ப்பு கோரி போராட்டம் நடத்தும் போது, மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்ட அக்கட்சியின் தலைவா்கள் போராடும் இளைஞா்களை பாஜகவின் முகவா்கள் என்று கூறுகின்றனா். மறுபுறம், எம்.எல்.ஏ.-க்கள் சஞ்சீவ் ஜா மற்றும் குல்தீப் யாதவ் போன்ற தலைவா்கள் கற்பனையான அனுதாபத்தைக் காட்டி தொண்டா்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனா்.

தில்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீா்மானத்திற்கு வேலை வழங்க அதிகாரம் இல்லை. அரவிந்த் கேஜரிவால் அரசு தங்களை ஏமாற்றி விட்டது என்பதை பேருந்து மாா்ஷல்கள் மற்றும் குடிமைத் தற்காப்புத் தன்னாா்வலா்களாக சேவையாற்றியவா்கள் இப்போது நன்கு புரிந்து கொண்டுள்ளனா். அவா்களின் நம்பிக்கை இப்போது பாஜக மீது இருக்கிறது.

எனவே, வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த இளைஞா்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உறுதிமொழியை ஆட்சியின் முதல் 100 நாள்களில் நிறைவேற்றுவோம் என்றாா் அபய் வா்மா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.