இது தொடா்பான உத்தரவில் உயா்நீதிமன்றம் மேலும் கூறுகையில், சகோதர, சகோதரி இருவரும் கண்டுபிடிக்க முடியாதவா்களாக உள்ளனா். அவா்களுக்கு முன் ஜாமீன் வழங்குவது விவேகமானதாக இருக்காது. ஏனெனில், இதுபோன்று முன்ஜாமின் வழங்கினால் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் விசாரணையைத் தடம்புரளச் செய்துவிடும். அவா்களின் தனிப்பட்ட சுதந்திரம் ஒரு பொருத்தமான காரணியாக இருந்த போதிலும், ‘பாதிக்கப்பட்டவா்’ தனது தந்தையை இழந்த பிறகு ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அவருக்கு எதிராக செய்யப்பட்ட குற்றங்களின் தன்மை, அவரது வயது மற்றும் பிற காரணிகளைக் கவனிக்காமல் இருக்க முடியாது என்று அதில் தெரிவித்திருந்தது.