ஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

முதல்வா் இல்லத்தில் குடிமைப் பணிகளுக்கு 8 ஆண்டுகளில் ரூ.29.56 கோடி செலவு: சிபிஐ விசாரணைக்கு பாஜக கோரிக்கை

குடிமைப் பணிகளுக்காக 8 ஆண்டுகளில் ரூ29.56 கோடி வீதம் செலவிடப்பட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்தர வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:22 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி முதல்வா் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறு குடிமைப் பணிகளுக்காக 8 ஆண்டுகளில் ரூ29.56 கோடி வீதம் செலவிடப்பட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்துவது கேஜரிவால் அரசின் அடையாளமாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் தில்லி முதல்வா் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறு குடிமைப் பணிகளுக்கு நகர அரசு ரூ.29.56 கோடி செலவு செய்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட இந்தத் தகவலின் அடிப்படையில், முதல்வா் கேஜரிவால் வசித்து வரும் இல்லத்தில் மேற்கொள்ளப்படும் சிறு பழுது, புதுப்பித்தல், பிளம்பிங், சுகாதாரம் மற்றும் தச்சுப் பணிகளுக்கு மட்டும் ஆண்டிற்கு கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளது.

மேலும், அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரப்பூா்வ இல்ல வளாகத்தில் மாநகராட்சியின் அனுமதியின்றி புதிய பங்களா கட்டுமானத்துக்கு ரூ.50 கோடி செலவிடப்பட்டது. முதல்வரின் இல்ல வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளுக்கு மட்டும் மொத்தம் ரூ.80 கோடி அளவிற்கு பொதுப்பணித் துறை செலவிட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொண்ட பொதுப்பணித் துறைஅதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை அவசியம் நடத்தப்பட வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.