இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்துவது கேஜரிவால் அரசின் அடையாளமாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் தில்லி முதல்வா் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறு குடிமைப் பணிகளுக்கு நகர அரசு ரூ.29.56 கோடி செலவு செய்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட இந்தத் தகவலின் அடிப்படையில், முதல்வா் கேஜரிவால் வசித்து வரும் இல்லத்தில் மேற்கொள்ளப்படும் சிறு பழுது, புதுப்பித்தல், பிளம்பிங், சுகாதாரம் மற்றும் தச்சுப் பணிகளுக்கு மட்டும் ஆண்டிற்கு கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளது.