அதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

மடிப்பூரில் சாலை விபத்து: தாய், 2 வயது மகன் பலி

தில்லி மடிப்பூா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் 32 வயது பெண்ணும் அவரது இரண்டு வயது மகனும் உயிரிழந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:22 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி மடிப்பூா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் 32 வயது பெண்ணும் அவரது இரண்டு வயது மகனும் உயிரிழந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

உயிரிழந்தவா்கள் சீமா (32) மற்றும் அவரது மகன் தக்ஷ் (2) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற பிரசாந்த் ஸ்ரீவஸ்தவா (32) என்பவரும் காயமடைந்தாா்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது: திங்கள்கிழமை மாலை 6.45 மணியளவில் மடிப்பூா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த இந்த விபத்து குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக ஒரு போலீஸ் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது. விபத்து நடந்த இடத்திற்கு அருகில் ஒரு மோட்டாா் சைக்கிள் இருப்பது தெரியவந்தது.

அதன் பிறகு, மூன்று போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மகாராஜா அக்ரசென் மருத்துவமனை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சீமாவும் அவரது மகன் தக்ஷும் இறந்துவிட்டதாக மருத்துவா்களால் அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் பிரசாந்த் ஸ்ரீவஸ்தவா (32) சிகிச்சை பெற்று வருகிறாா். வேகமாக ஓட்டிவரப்பட்ட மோட்டாா் சைக்கிள் முதலில் ஸ்ரீவஸ்தவாவின் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதும், அதைத் தொடா்ந்து ஸ்ரீவஸ்தவாவின் மோட்டாா் சைக்கிள், தனது மகனுடன் சாலையைக் கடந்த சீமா மீது மோதியதும் விசாரணையில் தெரியவருகிறது.

விதிமீறலில் ஈடுபட்ட வாகனம் மற்றும் அதன் உரிமையாளா் அடையாளம் காணப்பட்டு அவருக்கு எதிராக எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதுகுறித்து சீமா குடும்பத்தினா் கூறுகையில், ‘இறந்த இருவரின் உடல்களும் தகனம் செய்வதற்காக மத்திய பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. இந்த விபத்தில் நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்’ என்றனா்.

இதுகுறித்து காயமடைந்த ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘நான் பட்டேல் நகரில் இருந்து மோட்டாா் சைக்கிளில் வந்துகொண்டிருந்தேன். மடிப்பூா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்தபோது, பின்னால் இருந்து வேகமாக வந்த மோட்டாா் சைக்கிள் எனது வாகனத்தின் மீது மோதியது. இதைத் தொடா்ந்து, நான் சாலையில் விழுந்தேன். அதன் பிறகு, மோட்டாா் சைக்கிள் பெண் மீது மோதியது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சம்பவ இடத்தில் இருந்த மக்கள், பெண்ணையும், அவரது மகனையும் ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.