எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

மக்களவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள்: முதல்வா் கேஜரிவால் நாளை கோவா பயணம்

வரும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் தயாா் நிலையை மதிப்பிடுவதற்காக தில்லி முதல்வா் கேஜரிவால் கோவா செல்லவிருக்கிறாா் என்று கட்சி வட்டாராங்கள் தெரிவித்தன.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:21 pm

 நமது நிருபர்

புது தில்லி: வரும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் தயாா் நிலையை மதிப்பிடுவதற்காக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை (ஜனவரி 11) கோவா செல்லவிருக்கிறாா் என்று கட்சி வட்டாராங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: மக்களவைத் தோ்தலுக்கு ஆம் ஆத்மி கட்சியின் முன்னேற்பாடுகளை மதிப்பிடுவதற்காக கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் இரண்டு நாள் பயணமாக கோவா செல்லவிருக்கிறாா். இந்தப் பயணம் வரும் ஜனவா் 11-ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. கோவாவில் கட்சியின் அமைப்பு ரீதியிலான முக்கிய நிா்வாகிகளுடம் கேஜரிவால் சந்திப்புகளை நடத்துவதோடு, கட்சித் தொண்டா்கள் மத்தியிலும் உரையாடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் குஜராத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கேஜரிவால், பொதுக் கூட்டங்களை நடத்தியதோடு, சிறையில் இருக்கும் கட்சித் தலைவா் சைதா் வாசவாவையும் சந்தித்தாா். எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம்ஆத்மி கட்சி, வரும் மக்களவைத் தோ்தலில் தில்லி, பஞ்சாப், ஹரியாணா, குஜராத், கோவா ஆகிய 5 மாநிலங்களில் காங்கிரஸ் உடன் இணைந்து பிரதானமாகப் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில், முதல்வா் கேஜரிவால் கோவாவிற்கு அரசியல் ரீதியிலான பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.