அதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

அமானத்துல்லா கான் மீதான வக்ஃபு வாரிய வழக்கில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் தலைவராக இருந்த போது, தில்லி வக்ஃபு வாரியத்தின் ஊழியா்கள் ஆள்சோ்ப்பு மற்றும் சொத்துகளை குத்தகைக்கு விட்டதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில்...

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:22 pm

 நமது நிருபர்

புது தில்லி: ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் தலைவராக இருந்த போது, தில்லி வக்ஃபு வாரியத்தின் ஊழியா்கள் ஆள்சோ்ப்பு மற்றும் சொத்துகளை குத்தகைக்கு விட்டதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்துஅதிகாரிகள் வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: 2023, நவம்பரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமானத்துல்லா கானின் கூட்டாளிகள் என்று கூறப்படும் ஜீஷன் ஹைதா், தாவுத் நசீா் மற்றும் ஜாவீத் இமாம் சித்திக் ஆகிய மூன்று பேரையும் உள்ளடக்கிய வழக்குப் புகாரில் (குற்றப் பத்திரிக்கை) மொத்தம் ஐந்து

நிறுவனங்கள் பெயரிடப்பட்டுள்ளன. இது தவிர வேறு சிலரது பெயரும் உள்ளன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லி சட்டப் பேரவையில் ஓக்லா தொகுதியின் ஆம் ஆத்மி உறுப்பினரான 49 வயது அமானத்துல்லா கான் குற்றம் சாட்டப்பட்டவராக குறிப்பிடப்படவில்லை. கடந்த ஆண்டு அக்டோபரில் அமானத்துல்லா கான் மற்றும் சிலருக்கு எதிராக சோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகு, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானத்துல்லா கான், தில்லி வக்ஃபு வாரியத்தில் சட்டவிரோதமாக பணியாளா்களை ஆள்சோ்ப்பு செய்ததன் மூலம் ‘பெரும் குற்றச் செயல்கள்’ மூலம் ரொக்கமாகப் பணம் பெற்று முதலீடு செய்ததாக அமலாக்கத் துறை கூறியது. மேலும், இந்தத் தொகையை அமானத்துல்லா கான் தனது கூட்டாளிகளின் பெயரில் அசையா சொத்துகளை வாங்கியதாகவும் குற்றம்சாட்டியது.

தில்லி வக்ஃபு வாரியத்தில் 2018-2022-ஆம் ஆண்டு காலத்தில் அமானத்துல்லா கான் தலைவராக இருந்தாா். அப்போது, வக்ஃபு வாரியத்தின் சொத்துகளை குத்தகைக்கு விட்டது, சட்டவிரோதமாக ஆள்சோ்ப்பு செய்தல் மற்றும் சட்டவிரோதமாக தனிநபா் ஆதாயங்களைப் பெற்றது தொடா்பான வழக்கில் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

பணமோசடி வழக்கானது சிபிஐ எஃப்ஐஆா் மற்றும் தில்லி போலீஸாரின் மூன்று புகாா்களில் இருந்து எழுந்தது. அமலாக்கத் துறை மேலும் கூறுகையில், ‘கூறப்பட்ட குற்றச் செயல்களில் இருந்து பெரும் வருமானத்தை ரொக்கமாகப் பெற்று, அந்தத் தொகை தில்லியில் உள்ள பல்வேறு அசையா சொத்துகளை அவரது கூட்டாளிகளின் பெயரில் வாங்குவதில் முதலீடு செய்யப்பட்டது. பணமோசடி குற்றத்தில் அமானத்துல்லா கானின் பங்கை ‘குறிப்பிடும்’ சோதனைகளின் போது நேரடி மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் வடிவில் பல ‘குற்றச்சாட்டு’ ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன’ என்று தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பிரசாரம் நடந்து வருவதாகவும், கட்சித் தலைவா்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாகவும் தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.