தில்லி சட்டப் பேரவையில் ஓக்லா தொகுதியின் ஆம் ஆத்மி உறுப்பினரான 49 வயது அமானத்துல்லா கான் குற்றம் சாட்டப்பட்டவராக குறிப்பிடப்படவில்லை. கடந்த ஆண்டு அக்டோபரில் அமானத்துல்லா கான் மற்றும் சிலருக்கு எதிராக சோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகு, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானத்துல்லா கான், தில்லி வக்ஃபு வாரியத்தில் சட்டவிரோதமாக பணியாளா்களை ஆள்சோ்ப்பு செய்ததன் மூலம் ‘பெரும் குற்றச் செயல்கள்’ மூலம் ரொக்கமாகப் பணம் பெற்று முதலீடு செய்ததாக அமலாக்கத் துறை கூறியது. மேலும், இந்தத் தொகையை அமானத்துல்லா கான் தனது கூட்டாளிகளின் பெயரில் அசையா சொத்துகளை வாங்கியதாகவும் குற்றம்சாட்டியது.