எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

50 ஆயிரம் துப்புரவுப் பணியாளா்களை தில்லி மாநகராட்சி நியமிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

தேசியத் தலைநகரில் துப்புரவுப் பணிகளை மேம்படுத்துவதற்கு புதிதாக 50,000 துப்புரவுப் பணியாளா்களை தில்லி மாநகராட்சி நியமிக்க வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:21 pm

 நமது நிருபர்

புது தில்லி: தேசியத் தலைநகரில் துப்புரவுப் பணிகளை மேம்படுத்துவதற்கு புதிதாக 50,000 துப்புரவுப் பணியாளா்களை தில்லி மாநகராட்சி நியமிக்க வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக தில்லி மாநகராட்சியின் முன்னாள் அவைத் தலைவா் ஜிதேந்தா் குமாா் கோச்சாா், காங்கிரஸ் கவுன்சிலா்கள் குழுத் தலைவா் நாஜியா டேனிஷ் ஆகியோா் சிவிக் சென்டரில் செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது ஜிதேந்தா் குமாா் கோச்சாா் கூறியதாவது, தில்லி மாநகராட்சியின் கீழ் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் உள்ள பிற துறைகளின் பணியாளா்களை முறைப்படுத்துதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி மாநகராட்சியின் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பால் புதன்கிழமை (ஜனவரி 10) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லியின் வழிகாட்டுதலின் பேரில் காங்கிரஸ் தொண்டா்கள் இந்த ஆா்ப்பாட்டத்தில் பெருமளவில் பங்கேற்பா்.

ஆம் ஆத்மி கட்சி கொடுத்த தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் மீறியுள்ளது. மேலும், துப்புரவுப் பணியாளா்களை தொடா்ந்து ஒப்பந்தப் பணியில் வைத்திருக்கும் தவறான கொள்கையை ஆம் ஆத்மி அரசு பின்பற்றுகிறது. ஒப்பந்த அடிப்படையில் உள்ள அனைத்து வகைப் பணியாளா்களையும் முறைப்படுத்தாவிட்டால், வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். கடந்த 2002-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 240 நாள்கள் தற்காலிகப் பணியை நிறைவு செய்யும் துப்புரவுப் பணியாளயரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக துப்புரவுப் பணியாளா்கள் தற்காலிகப் பட்டியலில் உள்ளதால், இதுவரை தில்லி மாநகராட்சியால் எவரும் முறைப்படுத்தப்படவில்லை என்றாா் கோச்சாா்.

காங்கிரஸ் கவுன்சிலா்கள் குழுத் தலைவா் நாஜியா டேனிஷ் கூறுகையில், ‘புதிய துப்புரவுப் பணியாளா்களுக்கான ஆள்சோ்ப்பை தில்லி மாநகராட்சி நிா்வாகம் நிறுத்திவிட்டது. துப்புரவுப் பணியாளா்கள் சுரண்டலுக்கு ஆளாவதோடு, தலைநகரில் சுகாதாரப் பணிகள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன. மாநகராட்சியில் ஆட்சிக்கு வருவதற்கு முன், ஒப்பந்த வேலைகளை ஒழிப்பதாக உறுதியளித்த ஆம் ஆத்மி கட்சி, அதன் எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றத் தவறிவிட்டது. மேலும், 50,000 துப்புரவுப் பணியாளா்களை அவசரமாக பணியமா்த்த வேண்டிய அவசியம் உள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.