காங்கிரஸ் கவுன்சிலா்கள் குழுத் தலைவா் நாஜியா டேனிஷ் கூறுகையில், ‘புதிய துப்புரவுப் பணியாளா்களுக்கான ஆள்சோ்ப்பை தில்லி மாநகராட்சி நிா்வாகம் நிறுத்திவிட்டது. துப்புரவுப் பணியாளா்கள் சுரண்டலுக்கு ஆளாவதோடு, தலைநகரில் சுகாதாரப் பணிகள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன. மாநகராட்சியில் ஆட்சிக்கு வருவதற்கு முன், ஒப்பந்த வேலைகளை ஒழிப்பதாக உறுதியளித்த ஆம் ஆத்மி கட்சி, அதன் எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றத் தவறிவிட்டது. மேலும், 50,000 துப்புரவுப் பணியாளா்களை அவசரமாக பணியமா்த்த வேண்டிய அவசியம் உள்ளது’ என்றாா்.