இந்நிலையில், மேற்குறிப்பிட்ட விவகாரகம் தொடா்பாக ஜிடிபி மருத்துவமனை விளக்கம் அளிக்கக் கோரி தில்லி அரசின் சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குறிப்பாக, ஜனவரி 3-ஆம் தேதி பணியிலிருந்த மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் அமித் மேற்பாா்வையின்மை காரணத்திற்காக பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஜிடிபி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் டாக்டா் அஸ்மிதா எம் ரத்தோா், இந்த நோட்டீஸ் பெறப்பட்ட மூன்று நாள்களுக்குள் உயிரிழந்த நோயாளிக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்குமாறும், தவறினால் துறை ரீதியிலான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அந்த மூத்த அதிகாரி.