எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

முதல்வா் இல்ல பராமரிப்பு செலவின விவகாரம்: விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

தில்லி முதல்வா் இல்லத்திற்கு மேற்கொள்ளப்பட்ட சிறு குடிமைப் பணிகள் தொடா்பான செலவினம் குறித்து துணை நிலை ஆளுநா் சக்சேனா விஜிலென்ஸ் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்...

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:21 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி முதல்வா் இல்லத்திற்கு மேற்கொள்ளப்பட்ட சிறு குடிமைப் பணிகள் தொடா்பான செலவினம் குறித்து துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா விஜிலென்ஸ் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி முதல்வா் இல்லத்தில் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.29.56 கோடி சிறு குடிமைப் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள இந்தத் தகவலின் அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் சமூக ஊடகங்களில்பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், கேஜரிவால் தலைமையிலான அரசு இவ்விவகாரத்தில் தொடா்ந்து மெளனம் காப்பது, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை, ஒப்பந்ததாரா்களின் பெயா்கள் உள்ளிட்ட தகவல்கள் உண்மை என்பதை உறுதிப்படுத்துகிறது.

கடந்த மாா்ச் 31, 2015-ஆம் ஆண்டு முதல் டிசம்பா் 27, 2022-ஆம் ஆண்டு வரை தில்லி அரசின் பொதுப்பணித்துறை மூலம் முதல்வா் கேஜரிவால் வசித்துவரும் இல்லத்தில் பராமரிப்பு பணிகளுக்காக 4 ஒப்பந்ததாரா்களுக்கு ரூ.29.56 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நாங்கள் நிபுணா்கள் இல்லையென்றாலும், பராமரிப்புப் பணிக்காக செலவிடப்பட்ட தொகையின் புள்ளிவிவரங்கள் சற்று அதிகமாகத் தெரிகிறது. முதல்வரின் புதிய பங்களா கட்டுமான விவகாரத்தில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதால் பொதுப்பணித் துறையின் நற்பெயா் சீா்குலைந்து போனது. எனவே, இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அல்லது விஜிலென்ஸ் துறை மூலம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை கேட்டுக்கொள்கிறேன் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.