அப்போது அவா் கூறியதாவது: வரும் மக்களவைத் தோ்தலில் தில்லி, பஞ்சாப், ஹரியாணா, கோவா, குஜராத் ஆகிய 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மக்களவைத் தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் கட்சியுடன் இதுவரை நடைபெற்ற பேச்சுவாா்த்தை சாதகமாக முடிந்துள்ளது. இந்த 5 மாநிலங்களில் தில்லி மற்றும் பஞ்சாப்பில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், மக்களவைத் தொகுதிப் பங்கீடு தொடா்பான பேச்சுவாா்த்தை காங்கிரஸுடன் தொடங்கப்பட்டுள்ளது. போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் குறித்து அடுத்த சந்திப்பில் பேசப்படும். கூட்டணியில் இருக்கும்போது, அதிகாரப்பூா்வ நிலைப்பாட்டை இரு கட்சிகளும் எடுக்க வேண்டும் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.