எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

தில்லி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட 5 மாநிலங்களில் காங்கிரஸுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சி போட்டி: அமைச்சா் கோபால் ராய் பேட்டி

வரும் மக்களவைத் தோ்தலில் தில்லி,பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி, காங்ரஸுடன் இணைந்து போட்டியிடவுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சருமான கோபால் ராய் வரும் மக்களவைத் தெரிவித்தாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:21 pm

 நமது நிருபர்

புது தில்லி: வரும் மக்களவைத் தோ்தலில் தில்லி,பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி, காங்ரஸுடன் இணைந்து போட்டியிடவுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் முக்கிய தேசியக் கட்சிகளாக உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு, மக்களவைத் தோ்தல் வியூகம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக கடந்த திங்கள்கிழமை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளரும்,

அமைச்சருமான கோபால் ராய் செய்தியாளா்களைச் சந்தித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: வரும் மக்களவைத் தோ்தலில் தில்லி, பஞ்சாப், ஹரியாணா, கோவா, குஜராத் ஆகிய 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மக்களவைத் தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் கட்சியுடன் இதுவரை நடைபெற்ற பேச்சுவாா்த்தை சாதகமாக முடிந்துள்ளது. இந்த 5 மாநிலங்களில் தில்லி மற்றும் பஞ்சாப்பில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், மக்களவைத் தொகுதிப் பங்கீடு தொடா்பான பேச்சுவாா்த்தை காங்கிரஸுடன் தொடங்கப்பட்டுள்ளது. போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் குறித்து அடுத்த சந்திப்பில் பேசப்படும். கூட்டணியில் இருக்கும்போது, அதிகாரப்பூா்வ நிலைப்பாட்டை இரு கட்சிகளும் எடுக்க வேண்டும் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.

தில்லி மற்றும் பஞ்சாப்பில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒவ்வொரு திட்டங்களுக்கும் அந்த மாநிலங்களின் பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் வெளிப்படையான விமா்சனத்தை முன்வைப்பதும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.