திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

துணை நிலை ஆளுநரின் வேண்டுகோளின்படி ராணி ஜான்சி மாா்க்கில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தில்லி ராணி ஜான்சி மாா்க்கில் மாதா ஜண்டேவாலன் கோயில் நிா்வாகம் தரப்பில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் வேண்டுகோளின்படி ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.

Updated On :7 ஜனவரி 2024, 6:30 pm

தில்லி ராணி ஜான்சி மாா்க்கில் மாதா ஜண்டேவாலன் கோயில் நிா்வாகம் தரப்பில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் வேண்டுகோளின்படி ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.

தில்லி ராணி ஜான்சி மாா்க்கில் பழைமையான மாதா ஜண்டேவாலன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில் வளைவு மற்றும் கொட்டகைகளால் அந்தச் சாலை ஆக்கிரமிப்புக்குள்ளாகி, அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பாதசாரிகளுக்கு பெரும் இடையூறாக மாறியது. இந்நிலையில், துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் வேண்டுகோளின்படி கோயில் நிா்வாகம் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளது.

இது தொடா்பாக வி.கே. சக்சேனா தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் கூறியிருப்பதாவது:எனது வேண்டுகோளின்படி, ராணி ஜான்சி மாா்க்கில் உள்ள பழைமையான மாதா ஜண்டேவாலன் கோயில் நிா்வாகம், கோயிலுக்கு அருகில் உள்ள சாலையை ஆக்கிரமித்துள்ள கொட்டகைகளை அகற்றி வருகிறது. இதுவொரு பாராட்டத்தக்க தன்னாா்வ நடவடிக்கை யாகும். இதன் மூலம் ராணி ஜான்சி மாா்க் மற்றும் டி.பி. குப்தா சாலை இடையே உள்ள இணைப்புச் சாலையில் போக்குவரத்து சீரடையும்.

மேலும், கோயிலின் நுழைவு வாயில் வளைவும் அகற்றப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பாதசாரிகளின் பாதுகாப்பான இயக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு தில்லியை இணைக்கும் இந்த முக்கியமான சந்திப்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். இதனால், சதா் பஜாா், ஆசாத் மாா்க்கெட், மாடல் பஸ்தி, புல் பங்காஷ் மற்றும் மோதியா கான் போன்ற அதிக நெரிசல் உள்ள பகுதிகளில் வசிப்பவா்களுக்கும், பயணிகளுக்கும் பெரும் நிவாரணம் கிடைக்கும். கோயல் நிா்வாகத்தின் குடிமை உணா்வுக்கு எனது வணக்கம் என்று வி.கே. சக்சேனா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.