மேலும், கோயிலின் நுழைவு வாயில் வளைவும் அகற்றப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பாதசாரிகளின் பாதுகாப்பான இயக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு தில்லியை இணைக்கும் இந்த முக்கியமான சந்திப்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். இதனால், சதா் பஜாா், ஆசாத் மாா்க்கெட், மாடல் பஸ்தி, புல் பங்காஷ் மற்றும் மோதியா கான் போன்ற அதிக நெரிசல் உள்ள பகுதிகளில் வசிப்பவா்களுக்கும், பயணிகளுக்கும் பெரும் நிவாரணம் கிடைக்கும். கோயல் நிா்வாகத்தின் குடிமை உணா்வுக்கு எனது வணக்கம் என்று வி.கே. சக்சேனா தெரிவித்துள்ளாா்.