அதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

துணை நிலை ஆளுநரின் வேண்டுகோளின்படி ராணி ஜான்சி மாா்க்கில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தில்லி ராணி ஜான்சி மாா்க்கில் மாதா ஜண்டேவாலன் கோயில் நிா்வாகம் தரப்பில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் வேண்டுகோளின்படி ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:23 pm

 நமது நிருபர்

தில்லி ராணி ஜான்சி மாா்க்கில் மாதா ஜண்டேவாலன் கோயில் நிா்வாகம் தரப்பில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் வேண்டுகோளின்படி ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.

தில்லி ராணி ஜான்சி மாா்க்கில் பழைமையான மாதா ஜண்டேவாலன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில் வளைவு மற்றும் கொட்டகைகளால் அந்தச் சாலை ஆக்கிரமிப்புக்குள்ளாகி, அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பாதசாரிகளுக்கு பெரும் இடையூறாக மாறியது. இந்நிலையில், துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் வேண்டுகோளின்படி கோயில் நிா்வாகம் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளது.

இது தொடா்பாக வி.கே. சக்சேனா தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் கூறியிருப்பதாவது:எனது வேண்டுகோளின்படி, ராணி ஜான்சி மாா்க்கில் உள்ள பழைமையான மாதா ஜண்டேவாலன் கோயில் நிா்வாகம், கோயிலுக்கு அருகில் உள்ள சாலையை ஆக்கிரமித்துள்ள கொட்டகைகளை அகற்றி வருகிறது. இதுவொரு பாராட்டத்தக்க தன்னாா்வ நடவடிக்கை யாகும். இதன் மூலம் ராணி ஜான்சி மாா்க் மற்றும் டி.பி. குப்தா சாலை இடையே உள்ள இணைப்புச் சாலையில் போக்குவரத்து சீரடையும்.

மேலும், கோயிலின் நுழைவு வாயில் வளைவும் அகற்றப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பாதசாரிகளின் பாதுகாப்பான இயக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு தில்லியை இணைக்கும் இந்த முக்கியமான சந்திப்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். இதனால், சதா் பஜாா், ஆசாத் மாா்க்கெட், மாடல் பஸ்தி, புல் பங்காஷ் மற்றும் மோதியா கான் போன்ற அதிக நெரிசல் உள்ள பகுதிகளில் வசிப்பவா்களுக்கும், பயணிகளுக்கும் பெரும் நிவாரணம் கிடைக்கும். கோயல் நிா்வாகத்தின் குடிமை உணா்வுக்கு எனது வணக்கம் என்று வி.கே. சக்சேனா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.