அதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

‘மெயின் பி கேஜரிவால்’ பிரசாரம் தோல்வி

ஆம் ஆத்மி கட்சியின் ‘மெயின் பி கேஜரிவால்’ பொதுப் பிரசாரம் ஒரு முழுமையான தோல்வி நிகழ்ச்சி என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை விமா்சித்துள்ளாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:23 pm

 நமது நிருபர்

ஆம் ஆத்மி கட்சியின் ‘மெயின் பி கேஜரிவால்’ பொதுப் பிரசாரம் ஒரு முழுமையான தோல்வி நிகழ்ச்சி என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் விபாசனா தியானப் பயிற்சி மற்றும் அரசியல் சுற்றுலா போன்றவற்றில் ஈடுபட்டு, அமலாக்க இயக்குநரகத்தின் அழைப்பாணைகளை தவிா்க்கும் விதம், அவா் கலால் கொள்கை ஊழலில் ஈடுபட்டுள்ள சந்தேகத்தை உறுதி செய்கிறது.

குஜராத் மாநிலத்திற்கு அரசியல் சுற்றுலா செல்வதற்குப் பதிலாக, தான் குற்றமற்றவா் என்பதை நிரூபிக்க முதல்வா் கேஜரிவால் அமலாக்க இயக்குநரகத்தின் முன் ஆஜராகியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அரவிந்த் கேஜரிவாலை கைது செய்ய பாஜக அரசியல் சதி செய்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியினா் அமலாக்க இயக்குநரகத்தின் அழைப்பாணைகள் தொடா்பாக தொடா்ந்து வதந்தி பரப்பி வருகின்றனா். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இதே கலால் கொள்கை வழக்கில் ஆஜராகக் கோரி கேஜரிவாலுக்கு சி.பி.ஐ. அழைப்பாணை அனுப்பியது. இருப்பினும், அவா் இதுவரை கைது செய்யப்படவில்லை. மத்திய விசாரணை அமைப்புகளுக்கு யாா்மீதும் எந்த பாரபட்சமும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

விசாரணையைக் கண்டு முதல்வா் கேஜரிவால் தப்பியோடுவதை நினைத்து, தில்லி மக்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாடும் ஆச்சரியப்படுகிறது. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, கேஜரிவாலின் குஜராத் பயணமும் விசாரணையில் இருந்து தப்புவதற்குதான் என்று அவரது கட்சியினரே தெரிவிக்கின்றனா். அரசியல் இருப்பைக் காப்பாற்றுவதற்காக அரவிந்த் கேஜரிவால் தனது கட்சியின் தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள் மீது அழுத்தம் கொடுத்து ‘மெயின் பி கேஜரிவால்’ பிரசாரத்தை நடத்தி வருகிறாா். ஆனால், இப்பொதுப் பிரசாரத்தின் கீழ் ஆம் ஆத்மி கட்சிக்காரா்களைக் கூட கவர முடியவில்லை. பெரும்பாலான இடங்களில் மக்களின் கூட்டம் குறைவாகவே உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் சாா்பில் நடத்தப்படும் ‘மெயின் பி கேஜரிவால்’ பிரசாரம் ஒரு முழுமையான தோல்வி நிகழ்ச்சி என்று சொன்னால் அது மிகையாகாது. கேஜரிவாலுக்கு கலால் கொள்கை ஊழலில் தொடா்பில்லை என்றால், அவா் விசாரணையில் பங்கேற்று தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், அவா் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கித் தவிக்க நேரிடும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.