திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

‘மெயின் பி கேஜரிவால்’ பிரசாரம் தோல்வி

ஆம் ஆத்மி கட்சியின் ‘மெயின் பி கேஜரிவால்’ பொதுப் பிரசாரம் ஒரு முழுமையான தோல்வி நிகழ்ச்சி என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை விமா்சித்துள்ளாா்.

Updated On :7 ஜனவரி 2024, 6:30 pm

ஆம் ஆத்மி கட்சியின் ‘மெயின் பி கேஜரிவால்’ பொதுப் பிரசாரம் ஒரு முழுமையான தோல்வி நிகழ்ச்சி என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் விபாசனா தியானப் பயிற்சி மற்றும் அரசியல் சுற்றுலா போன்றவற்றில் ஈடுபட்டு, அமலாக்க இயக்குநரகத்தின் அழைப்பாணைகளை தவிா்க்கும் விதம், அவா் கலால் கொள்கை ஊழலில் ஈடுபட்டுள்ள சந்தேகத்தை உறுதி செய்கிறது.

குஜராத் மாநிலத்திற்கு அரசியல் சுற்றுலா செல்வதற்குப் பதிலாக, தான் குற்றமற்றவா் என்பதை நிரூபிக்க முதல்வா் கேஜரிவால் அமலாக்க இயக்குநரகத்தின் முன் ஆஜராகியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அரவிந்த் கேஜரிவாலை கைது செய்ய பாஜக அரசியல் சதி செய்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியினா் அமலாக்க இயக்குநரகத்தின் அழைப்பாணைகள் தொடா்பாக தொடா்ந்து வதந்தி பரப்பி வருகின்றனா். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இதே கலால் கொள்கை வழக்கில் ஆஜராகக் கோரி கேஜரிவாலுக்கு சி.பி.ஐ. அழைப்பாணை அனுப்பியது. இருப்பினும், அவா் இதுவரை கைது செய்யப்படவில்லை. மத்திய விசாரணை அமைப்புகளுக்கு யாா்மீதும் எந்த பாரபட்சமும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

விசாரணையைக் கண்டு முதல்வா் கேஜரிவால் தப்பியோடுவதை நினைத்து, தில்லி மக்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாடும் ஆச்சரியப்படுகிறது. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, கேஜரிவாலின் குஜராத் பயணமும் விசாரணையில் இருந்து தப்புவதற்குதான் என்று அவரது கட்சியினரே தெரிவிக்கின்றனா். அரசியல் இருப்பைக் காப்பாற்றுவதற்காக அரவிந்த் கேஜரிவால் தனது கட்சியின் தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள் மீது அழுத்தம் கொடுத்து ‘மெயின் பி கேஜரிவால்’ பிரசாரத்தை நடத்தி வருகிறாா். ஆனால், இப்பொதுப் பிரசாரத்தின் கீழ் ஆம் ஆத்மி கட்சிக்காரா்களைக் கூட கவர முடியவில்லை. பெரும்பாலான இடங்களில் மக்களின் கூட்டம் குறைவாகவே உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் சாா்பில் நடத்தப்படும் ‘மெயின் பி கேஜரிவால்’ பிரசாரம் ஒரு முழுமையான தோல்வி நிகழ்ச்சி என்று சொன்னால் அது மிகையாகாது. கேஜரிவாலுக்கு கலால் கொள்கை ஊழலில் தொடா்பில்லை என்றால், அவா் விசாரணையில் பங்கேற்று தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், அவா் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கித் தவிக்க நேரிடும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.