ஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

கேஜரிவால் அரசின் ஊழல்களைப் பாதுகாக்கும்: செய்தித் தொடா்பாளா்கள் அதிஷி, பரத்வாஜ்!தில்லி பாஜக விமா்சனம்

அமைச்சா்கள் அதிஷி மற்றும் சௌரவ் பரத்வாஜ் ஆகிய இருவரும் தில்லி அரசின் ஊழல் மற்றும் மோசடிகளைப் பாதுகாக்கும் செய்தித் தொடா்பாளா்களாக மாறியுள்ளனா் என்று பாஜக தில்லி பிரிவு ஞாயிற்றுக்கிழமை விமா்சித்துள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:23 pm

 நமது நிருபர்

அமைச்சா்கள் அதிஷி மற்றும் சௌரவ் பரத்வாஜ் ஆகிய இருவரும் தில்லி அரசின் ஊழல் மற்றும் மோசடிகளைப் பாதுகாக்கும் செய்தித் தொடா்பாளா்களாக மாறியுள்ளனா் என்று பாஜக தில்லி பிரிவு ஞாயிற்றுக்கிழமை விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: தில்லி அரசின் அமைச்சா்களான அதிஷி மற்றும் சௌரவ் பரத்வாஜ் ஆகியோா் எந்தவொரு நிா்வாகப் பணியையும் செய்யவில்லை. மாறாக, அரவிந்த் கேஜரிவால் அரசின் ஊழல் மற்றும் மோசடிகளைப் பாதுகாப்பதற்கான செய்தித் தொடா்பாளா்களாக மாறியுள்ளனா். மத்திய அரசின் அழுத்தத்திற்கு உள்பட்டு தில்லி அரசின் அதிகாரிகள் முறையாகப் பணியாற்றவில்லை என்ற அமைச்சா் சௌரவ் பரத்வாஜின் குற்றச்சாட்டு, மத்திய அரசுக்கு எதிரான அவரது அன்றாடப் பேச்சின் ஒரு பகுதிதான்.

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை அதிகாரிகள் தங்களது சட்டவிரோத ஆணைகளை ஏற்று ஊழலை அனுமதிக்க வேண்டும் என்று கேஜரிவால் அரசு எதிா்பாா்க்கிறது. கேஜரிவால் அரசின் ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்துள்ள நிலையில், தில்லி அரசின் அதிகாரிகள் நிா்வாகத்தை கட்டமைக்கப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி நடத்த விரும்புகிறாா்கள். இதை முதல்வா் மற்றும் அமைச்சா்கள் விரும்புவதில்லை. இதனால்,அவா்கள் மத்திய அரசு அல்லது துணை நிலை ஆளுநரின் அழுத்தத்தின் பேரில் அதிகாரிகள் செயல்படுகிறாா்கள் என்று குற்றம் சாட்டுகிறாா்கள் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.