ஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

மக்களவைத் தோ்தலில் மீனவா் சமூகத்துக்கு10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்: அகில இந்திய மீனவா் காங்கிரஸ்செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்

காங்கிரஸ் 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தில்லியில் நடைபெற்ற அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:23 pm

 நமது நிருபர்

வரும் மக்களவையில் தேர்தலில் மீனவர்கள் சமுதாயம் போட்டியிடும் வகையில், காங்கிரஸ் 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என  தில்லியில் நடைபெற்ற  அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அகில இந்திய மீனவர் காங்கிரஸின் தேசிய செயற்குழுக் கூட்டம் தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு  இந்த அமைப்பின் தேசியத் தலைவர் எஸ்.ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான கே.ராஜூ கலந்துகொண்டார்.  மேலும், நாடு முழுவதும் இருந்து மீனவர் காங்கிரஸின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்துக்குப் பிறகு "தினமணி'யிடம் தேசியத் தலைவர் எஸ்.ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியதாவது: 

இந்தக் கூட்டத்தில் வருகிற 14}ஆம் தேதி மணிப்பூர் முதல் மும்பை வரை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் "பாரத ஒற்றுமை நீதி யாத்திரை'யை சிறப்பாக நடத்துவது குறித்தும், இந்த நடைப்பயணத்தில் மீனவர் சமுதாய மக்களை எவ்வாறு ஈடுபடுத்துவது, நடைப்பயணம் செல்லும் மாநிலங்களில் அந்தந்த மாநில நிர்வாகிகள் எவ்வாறு வரவேற்பு அளிப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த நடைப்பயணத்தின்போது மீனவர் சமுதாயத்தினுருடன் கலந்துரையாடவும் அவர்களது பிரச்னையை எடுத்துரைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, காங்கிரஸ் அறிவித்துள்ள நன்கொடை வழங்கும் திட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் மீனவர் காங்கிரஸýம் குறைந்தபட்சம் 1,000 பேர் நன்கொடை அளிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேசிய நிர்வாகிள், மாநில நிர்வாகள் அதிகத் தொகையை வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

"2024'  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அதன் கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றிபெறச் செய்ய ஒருங்கிணைந்து செயல்படுவது, மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையிலான தேர்தல் அறிக்கை குழுவிடம் இந்தியா முழுவதும் மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலான வாக்குறுதிகளை வெளியிடும் வகையில் கேட்டுக் கொள்வது,  மேலும், இந்தியா முழுவதும் உள்ள மீனவர்களின் நலன் கருதி மீனவர்கள் சமுதாயத்துக்கான கணக்கெடுப்பை நடத்தும் வகையில், தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியிடக் கோரியும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், மீனவர் சமுதாயத்துக்கு நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் காங்கிரஸ் சார்பில்  பிரதிநிதித்துவம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால், வரும் மக்களவைத் தேர்தலில் மீனவர் சமுதாயம் அதிகம் உள்ள வாக்காளர்கள் பகுதிகளில் குறைந்தபட்சம் 10 தொகுதிகளை மீனவர் சமுதாயத்துக்கு காங்கிரஸ் சார்பில் ஒதுக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.