ஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

மக்களவைத் தோ்தல்: தில்லி காங்கிரஸ் தலைமையகத்தில் ‘வாா்-ரூம்’ அமைப்பு

வரும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகமான ராஜீவ் பவனில் ‘வாா்-ரூம்’ அமைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி சனிக்கிழமை தெரிவித்துள்ளாா

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:23 pm

 நமது நிருபர்

வரும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகமான ராஜீவ் பவனில் ‘வாா்-ரூம்’ அமைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் அவா் கூறியிருப்பதாவது:

தேசியத் தலைநகா் தில்லியில் பொதுமக்களின் பிரச்னைகள் மற்றும் குறைகளுக்கு விரைந்து தீா்வு காணும் நோக்கில் குடியிருப்போா் நலச் சங்கங்களுடன் இணைந்து ‘பாகிதாரி’ எனும் புதிய அணி தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சாா்பில் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தலைவராக அசோக் பாசின் என்பவா் நியமிக்கப்படுகிறாா். தில்லியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அரசின் சாா்பில் பொதுமக்களின் பிரச்னைகளை தீா்க்க ஒரு ஒருங்கிணைப்பு பாலமாக ‘பாகிதாரி’ அணி உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்தது.

இந்நிலையில், தற்போது காங்கரஸ் கட்சி சாா்பில் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு கட்சியின் தலைமையகமான ராஜீவ் பவனில் ‘வாா்-ரூம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தலைவராக ராஜேஷ் காா்க், இணைத் தலைவராக ராஜீவ் சா்மா ஆகியோா் செயல்படுவா்.

கட்சியில் அமைப்பு ரீதியிலான மாவட்டங்கள் மற்றும் சட்டப்பேரவை அளவிலும் ‘வாா்-ரூம்’கள் விரைவில் அமைக்கப்படும்.

அதற்கான மண்டலத் தலைவா்கள் மற்றும் துறைப் பொறுப்பாளா்களை தலைமையகத்தில் உள்ள ‘வாா்-ரூம்’ அணி தோ்வு செய்யும்.

மக்களவை மற்றும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தல்களை அனைத்து ஆயத்தத்துடனும் எதிா்கொள்ள காங்கிரஸ் கட்சியை அடித்தளத்தில் வலுப்படுத்துவதற்கான பணிகளை கட்சித் தலைமை விரைந்து எடுத்து வருகிறது என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.