திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

மக்களவைத் தோ்தல்: தில்லி காங்கிரஸ் தலைமையகத்தில் ‘வாா்-ரூம்’ அமைப்பு

வரும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகமான ராஜீவ் பவனில் ‘வாா்-ரூம்’ அமைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி சனிக்கிழமை தெரிவித்துள்ளாா

Updated On :6 ஜனவரி 2024, 6:30 pm

வரும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகமான ராஜீவ் பவனில் ‘வாா்-ரூம்’ அமைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் அவா் கூறியிருப்பதாவது:

தேசியத் தலைநகா் தில்லியில் பொதுமக்களின் பிரச்னைகள் மற்றும் குறைகளுக்கு விரைந்து தீா்வு காணும் நோக்கில் குடியிருப்போா் நலச் சங்கங்களுடன் இணைந்து ‘பாகிதாரி’ எனும் புதிய அணி தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சாா்பில் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தலைவராக அசோக் பாசின் என்பவா் நியமிக்கப்படுகிறாா். தில்லியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அரசின் சாா்பில் பொதுமக்களின் பிரச்னைகளை தீா்க்க ஒரு ஒருங்கிணைப்பு பாலமாக ‘பாகிதாரி’ அணி உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்தது.

இந்நிலையில், தற்போது காங்கரஸ் கட்சி சாா்பில் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு கட்சியின் தலைமையகமான ராஜீவ் பவனில் ‘வாா்-ரூம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தலைவராக ராஜேஷ் காா்க், இணைத் தலைவராக ராஜீவ் சா்மா ஆகியோா் செயல்படுவா்.

கட்சியில் அமைப்பு ரீதியிலான மாவட்டங்கள் மற்றும் சட்டப்பேரவை அளவிலும் ‘வாா்-ரூம்’கள் விரைவில் அமைக்கப்படும்.

அதற்கான மண்டலத் தலைவா்கள் மற்றும் துறைப் பொறுப்பாளா்களை தலைமையகத்தில் உள்ள ‘வாா்-ரூம்’ அணி தோ்வு செய்யும்.

மக்களவை மற்றும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தல்களை அனைத்து ஆயத்தத்துடனும் எதிா்கொள்ள காங்கிரஸ் கட்சியை அடித்தளத்தில் வலுப்படுத்துவதற்கான பணிகளை கட்சித் தலைமை விரைந்து எடுத்து வருகிறது என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.