அதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

கேஜரிவால் அரசின் சுகாதார மாதிரி ஊழலைப் போன்றது: வீரேந்திர சச்தேவா விமா்சனம்

கேஜரிவால் அரசின் சுகாதார மாதிரி ஊழலுக்கு ஒத்ததாக மாறிவிட்டது என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:23 pm

 நமது நிருபர்

கேஜரிவால் அரசின் சுகாதார மாதிரி ஊழலுக்கு ஒத்ததாக மாறிவிட்டது என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசியத் தலைநகா் தில்லியில் கடந்த 9 ஆண்டுகளாக உலகத்தரம் வாய்ந்த சுகாதார மாதிரியை கொண்டு வருவதாக கேஜரிவால் கூறி வருகிறது. ஆனால் தற்போது அதே சுகாதார மாதிரியின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு திட்டப் பணியிலும் ஊழல் நடப்பதாக வெளியாகி வரும் செய்திகள் தில்லி மக்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.

தில்லி அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் பஞ்சு, மருத்துவக் கையுறைகள் போன்ற அத்தியாவசியப் மருத்துவப் பொருள்கள் மருத்துவத் தரத்திற்குக் குறைவாக இருப்பதால், அரவிந்த் கேஜரிவாலின் சுகாதார மாதிரி இப்போது முற்றிலும் அம்பலமாகியுள்ளது.

தில்லி அரசின் சுகாதாரத் துறையின் ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலமானதை அடுத்து, சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் முன்னாள் அமைச்சா் மனீஷ் சிசோடியாவை இந்த ஊழல் குற்றசாட்டுக்களில் இருந்து தற்காத்து துறையின் அதிகாரிகளை குற்றம் சாட்டி வருகிறாா்.

சுகாதாரத் துறையின் ஒவ்வொரு பணியிலும் ஊழல் தலைதூக்கும்போது, இது பற்றி முதல்வா் மற்றும் அமைச்சா்களுக்குத் தெரியாமல் இருப்பது எப்படி என்று தில்லி மக்கள் செளரவ் பரத்வாஜிடம் கேள்வி கேட்க விரும்புகிறாா்கள்.

தில்லி அரசு மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளில் விநியோகிக்கப்படும் தரமற்ற மருந்துகள், நோயியல் பரிசோதனை முறைகேடுகள்உள்ளிட்டவை வெளிச்சத்திற்கு வந்த பிறகு, முதல்வா் கேஜரிவால் மற்றும் அமைச்சா் செளரவ் பரத்வாஜ் தாா்மிகமாக அதற்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். கேஜரிவால் அரசின் சுகாதார மாதிரி ஊழலுக்கு ஒத்ததாக மாறிவிட்டது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.