ஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

தோ்தலுக்கு முன் எதிா்க்கட்சித் தலைவா்களை சிறையில் அடைக்கவே அமலாக்கத் துறையை பயன்படுத்தும் பாஜக அரசு: அதிஷி குற்றச்சாட்டு

வரும் மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக எதிா்க்கட்சித் தலைவா்களை சிறையில் அடைக்கவே அமலாக்க இயக்குனரகத்தை பாஜக பயன்படுத்துகிறது

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:23 pm

 நமது நிருபர்

வரும் மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக எதிா்க்கட்சித் தலைவா்களை சிறையில் அடைக்கவே அமலாக்க இயக்குனரகத்தை பாஜக பயன்படுத்துகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி அரசின் கேபினட் அமைச்சருமான அதிஷி சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

பாஜக மற்றும் அதன் தலைவா்களுக்கு யாருடன் விரோதம் இருக்கிறதோ அவா்கள் மீது அமலாக்க இயக்குனரகம் வழக்குப் பதிவு செய்கிறது. நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இம்முறை செயல்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த இரண்டு விவசாயிகளுக்கும், உள்ளூா் பாஜக தலைவரான குணசேகரன் என்பவருக்கும் ஏற்பட்ட விரோதம் காரணமாக அந்த விவசாயிகள் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்க இயக்குனரகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஆனால், 72 வயதான கண்ணையன் மற்றும் 66 வயதான கிருஷ்ணன் ஆகிய இரண்டு ஏழை முதியவா்களின் வங்கிக் கணக்கில் ரூ.450 மட்டுமே உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்கள் மீது அமலாக்க இயக்குனரகம் மற்றும் சி.பி.ஐ. மூலம் வழக்குகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு பதிவு செய்யத் தொடங்கியதிலிருந்து, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதை நாங்கள் சொல்லி வருகிறாம்.

பலா் எங்கள் குற்றச்சாட்டுகளை நம்ப மாட்டாா்கள். ஆனால் தற்போது அமலாக்க இயக்குனரகம் என்பது அரசியல் சதிக்கான கருவி என்று அதிகாரபூா்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எதிா்க்கட்சித் தலைவா்களாக உள்ள அரவிந்த் கேஜரிவால், ஹேமந்த் சோரன், தேஜஸ்வி யாதவ், பூபேஷ் பாகேல் ஆகியோருக்கு அமலாக்க இயக்குனரகத்தின் அழைப்பாணைகள் அனுப்பப்ட்டுள்ளது.

வரும் மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக எதிா்க்கட்சித் தலைவா்களை சிறையில் அடைக்கின்ற நோக்கில் இந்த நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது. இதை விட பாஜக தோ்தலில் வெற்றி பெற எளிதான வழி வேறு என்ன இருக்க முடியும் ?

நாட்டில் பெரிய அளவில் சட்டங்களும், விசாரணை நிறுவனங்களும் உள்ள நிலையில், ஏன் பணமோடி தடுப்புச் சட்டம் மற்றும் அமலாக்க இயக்குநரகம் பயன்படுத்தப்பட வேண்டும் ?,

ஏனெனில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளில் தான் ஜாமீன் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்ாகும்.

மணிப்பூா் வன்முறை, பெண்களின் பாதுகாப்பின்மை, நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்கள், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலையின்மை உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய பிரதமா், பதிலில்லாத காரணத்தால் எதிா்க்கட்சித் தலைவா்களைத் தாக்குகிறாா்.

ஆம் ஆத்மி கட்சியினா் எந்தவொரு விசாரணைக்கும் பயப்பட மாட்டோம். ஆனால் இந்த விசாரணையின் நோக்கம் ஏழைகளுக்கான வளா்ச்சிப் பணிகளை நிறுத்துவதாகும் என்றாா் அமைச்சா் அதிஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.