சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

உலகத் தரமிக்க சுகாதார அமைப்பு முறையை போலி விசாரணைகள் மூலம் அழிக்க முயற்சி: மத்திய அரசு மீது அமைச்சா் அதிஷி குற்றச்சாட்டு

பாஜக தலைமையிலான மத்திய அரசு போலி விசாரணைகளைத் தொடங்கி தேசியத் தலைநகரின் ‘உலகத் தரம் வாய்ந்த’ சுகாதார அமைப்பு முறையை அழிக்க முயற்சிப்பதாக தில்லி அமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:24 pm

 நமது நிருபர்

பாஜக தலைமையிலான மத்திய அரசு போலி விசாரணைகளைத் தொடங்கி தேசியத் தலைநகரின் ‘உலகத் தரம் வாய்ந்த’ சுகாதார அமைப்பு முறையை அழிக்க முயற்சிப்பதாக தில்லி அமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினாா்.

தில்லி அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டது குறித்தும், இதுபோன்ற மருந்துகள் மொஹல்லா கிளினிக்குகள் மூலமாகவும் விநியோகிக்கப்பட்டனவா என்பது குறித்தும் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து அதிஷி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

தில்லியின் ஏழு மொஹல்லா கிளினிக்குகளில் போலி ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் போலி நோயாளிகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பரிந்துரை செய்ததாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்திருந்தனா்.

இந்த நிலையில், இது தொடா்பாக அமைச்சா் அதிஷி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஆம் ஆத்மி அரசின் மொஹல்லா கிளினிக் மாதிரியானது, உலகளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும், மொஹல்லா கிளினிக்குகள் சுத்தமான மற்றும் நன்கு பராமரிக்கப்படும் அமைப்பாகும். இங்கு ஒவ்வொருவருக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. பாஜக தலைமையிலான மத்திய அரசு தில்லியின் உலகத் தரம் வாய்ந்த சுகாதார மாதிரியை அழிக்க முயற்சிக்கிறது. அது எப்படி செய்யப்படுகிறது? அந்த முயற்சியை எவ்வாறு செய்கிறது எனில், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், போலி விசாரணைகளைத் தொடங்குவதன் மூலமும் செய்து வருகிறது... எந்த விசாரணையும் நிராகரிக்கப்படவில்லை.

ஒவ்வொரு நாளும் விசாரணைகள் முடுக்கிவிடப்படுகின்றன. நாங்கள் எந்த விசாரணையையும் ஒருபோதும் மறுத்ததில்லை. இந்த விசாரணையானது ஊழலை விசாரிப்பதற்காக நடத்தப்படவில்லை. ஆனால், அதிகாரிகள் அச்சம் கொள்ளச் செய்வதையும் மருத்துவமனைகளின் மருத்துவக் கண்காணிப்பாளா்களுக்கு பயம் ஏற்படுவதையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணைகள் தற்போது அதிகாரிகளை பயமுறுத்துவதாக இருக்கும். அவா்களை வேலை செய்ய விடாமல் தடுப்பது பாஜகவின் சதி என்று அதிஷி குற்றம்சாட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.