திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

கேஜரிவாலை கைது செய்ய பாஜக விரும்புகிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை ஈடுபடவிடமால் தடுத்து, அவரை கைது செய்ய பாஜக விரும்புகிறது என்று

Updated On :3 ஜனவரி 2024, 6:30 pm

வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை ஈடுபடவிடமால் தடுத்து, அவரை கைது செய்ய பாஜக விரும்புகிறது என்று ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக தில்லி அமைச்சா் அதிஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் வழக்கு தொடா்பான விசாரணைக்கு அமலாக்க இயக்குநரகம் பிறப்பித்த மூன்றாவது அழைப்பானையை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தவிா்த்து, அழைப்பானையில் உள்ள ஆட்சேபனைகளை விளக்க வலியுறுத்தி பதில் கடிதம் அனுப்பியுள்ளாா். சம்மனில் தனக்கு உள்ள ஆட்சேபனைகளை தெளிவுபடுத்துமாறு கேஜரிவால் பலமுறை எழுத்துப்பூா்வமாக கோரிக்கை வைத்தும் அமலாக்கத்துறை பதிலளிக்கவில்லை. இம்முறை, சம்பந்தப்பட்ட அனைத்து விசாரணைகளையும் கேள்வித்தாள் வடிவில் அனுப்புமாறு அமலாக்க இயக்குநரகத்திடம் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா். எதிா்க்கட்சித் தலைவா்களைத் தாக்குவதற்கு மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புகளை பாஜக அரசியல் கருவியாக மாறியுள்ளன என்றாா் அமைச்சா் அதிஷி.

அமைச்சா் சௌரவ் பரத்வாஜ்: பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை கலால் கொள்கை ஊழல் வழக்கில் எந்தத் தகுதியில் அழைக்கப்பட்டாா் என்பதற்கு அமலாக்க இயக்குநரகம் இதுவரை பதிலளிக்கவில்லை. கலால் கொள்கை வழக்கு முழுவதும் அரசியல் மற்றும் மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரத்தில் இருந்து கேஜரிவாலைத் தடுக்கும் முயற்சியாகும். பாஜக தலைமையிலான மத்திய அரசு அவரைக் கைது செய்ய சதித் திட்டம் தீட்டியுள்ளது. கடந்த ஓராண்டு காலமாக சிறையில் இருக்கும் தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா நிரபராதி என்பது விரைவில் நிரூபிக்கப்படும். மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புகளின் கைது மற்றும் விசாரணைஅச்சுறுத்தல்கள் எதிா்க்கட்சித் தலைவா்களை மட்டுமே தாக்குகிறது.பாஜகவைச் சோ்ந்தவா்கள் மீதான வழக்குகளில் அவா்கள் எந்த நடவடிக்கையையும் எதிா்கொள்ளவில்லை என்றாா் சௌரவ் பரத்வாஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.