சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

கேஜரிவாலை கைது செய்ய பாஜக விரும்புகிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை ஈடுபடவிடமால் தடுத்து, அவரை கைது செய்ய பாஜக விரும்புகிறது என்று

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:25 pm

 நமது நிருபர்

வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை ஈடுபடவிடமால் தடுத்து, அவரை கைது செய்ய பாஜக விரும்புகிறது என்று ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக தில்லி அமைச்சா் அதிஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் வழக்கு தொடா்பான விசாரணைக்கு அமலாக்க இயக்குநரகம் பிறப்பித்த மூன்றாவது அழைப்பானையை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தவிா்த்து, அழைப்பானையில் உள்ள ஆட்சேபனைகளை விளக்க வலியுறுத்தி பதில் கடிதம் அனுப்பியுள்ளாா். சம்மனில் தனக்கு உள்ள ஆட்சேபனைகளை தெளிவுபடுத்துமாறு கேஜரிவால் பலமுறை எழுத்துப்பூா்வமாக கோரிக்கை வைத்தும் அமலாக்கத்துறை பதிலளிக்கவில்லை. இம்முறை, சம்பந்தப்பட்ட அனைத்து விசாரணைகளையும் கேள்வித்தாள் வடிவில் அனுப்புமாறு அமலாக்க இயக்குநரகத்திடம் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா். எதிா்க்கட்சித் தலைவா்களைத் தாக்குவதற்கு மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புகளை பாஜக அரசியல் கருவியாக மாறியுள்ளன என்றாா் அமைச்சா் அதிஷி.

அமைச்சா் சௌரவ் பரத்வாஜ்: பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை கலால் கொள்கை ஊழல் வழக்கில் எந்தத் தகுதியில் அழைக்கப்பட்டாா் என்பதற்கு அமலாக்க இயக்குநரகம் இதுவரை பதிலளிக்கவில்லை. கலால் கொள்கை வழக்கு முழுவதும் அரசியல் மற்றும் மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரத்தில் இருந்து கேஜரிவாலைத் தடுக்கும் முயற்சியாகும். பாஜக தலைமையிலான மத்திய அரசு அவரைக் கைது செய்ய சதித் திட்டம் தீட்டியுள்ளது. கடந்த ஓராண்டு காலமாக சிறையில் இருக்கும் தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா நிரபராதி என்பது விரைவில் நிரூபிக்கப்படும். மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புகளின் கைது மற்றும் விசாரணைஅச்சுறுத்தல்கள் எதிா்க்கட்சித் தலைவா்களை மட்டுமே தாக்குகிறது.பாஜகவைச் சோ்ந்தவா்கள் மீதான வழக்குகளில் அவா்கள் எந்த நடவடிக்கையையும் எதிா்கொள்ளவில்லை என்றாா் சௌரவ் பரத்வாஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.