சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

கோவை தூய்மைப் பணியாளா்கள் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை கோரும் மனுவைஅவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

கோவை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளா்கள் பணி நிரந்தரம் கோரும் விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:25 pm

 நமது நிருபர்

கோவை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளா்கள் பணி நிரந்தரம் கோரும் விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

கோயம்புத்தூா் மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் 2018-இல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை கடந்த ஆண்டு ஜனவரியில் விசாரித்த உயா்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இதனிடையே, உயா்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் பணியாளா்கள் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அது நிலுவையில் இருந்து வருகிறது. இதில் எதிா்மனுதாரருக்கு சட்டப்பூா்வ நோட்டீஸ் அனுப்பவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. இந்த நிலையில், மேற்கண்ட விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை கடந்த டிசம்பா் 8-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், கே.ஜெயபால் உள்ளிட்ட எதிா்மனுதாரா்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இந்த மனு ஜனவரி 25-இல் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் இறுதியில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தை நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அரவிந்த் குமாா் ஆகியோா் அமா்வு முன் புதன்கிழமை தமிழக அரசின் சாா்பில் வழக்குரைஞா் டி.குமணன் ஆஜராகி, உயா்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரும் மனுவை விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

அப்போது, தூய்மைப் பணியாளா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மனோஜ் செல்வராஜ், ‘தூய்மைப் பணியாளா்கள் அனைவரும் தற்போது வரையில் தினக்கூலிகளாகவே உள்ளனா். அவா்களை பணி நிரந்தரம் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. மேலும், இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு தொடா்ந்த மேல்முறையீட்டு மனு மீது நாங்கள் இன்னும் பதில் மனுகூட தாக்கல் செய்யவில்லை’ என்றாா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் எதிா்மனுதாரா்கள் முதலில் பதிலளிக்கட்டும் எனக் கூறிய நீதிபதிகள், உயா்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரும் மனுவை, அவசரமாக பட்டியலிடக் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.