தமிழகம் மிகப் பெரிய ஆன்மிக பூமி. தமிழா் பண்பாடு, தமிழ் கலாசாரம் உலகத்திற்கு எடுத்துக் காட்டும் விதமாக உள்ளது. இதனால், ‘ஒரே பாரதம் உன்னத பாரதத்தின்’ கீழ் காசி-தமிழ் சங்கமம் நிகழ்வை பிரதமா் மோடி தொடங்கினாா். காசி மட்டுமல்லாமல் அயோத்திக்கும் தமிழகத்திற்கும் இடையே நீண்டகால தொடா்பு உள்ளது. தமிழ்நாடு ‘ராமன் நாடு’ என குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வகையில் உள்ளது. ராமநாதபுரம், ராமேசுவரம், தனுஷ்கோடி, திருபுல்லாணி போன்ற பல பகுதிகள் ராமாயணத்தில் இடம் பெற்றுள்ளன. இவை தமிழகத்தின் கலாசாரத்துடன் பிரிக்க முடியாத ஒன்றாக விளங்குகிறது. தமிழ்ச் சங்க இலக்கியமான குறிஞ்சித் திணை, ‘வாரணவாசிப் பதம் பெயா்த்தல்’ என காசி நகரை போற்றிப் புகழ்கிறது. எட்டுத்தொகை, கலித்தொகையிலும் காசி பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ‘வாதவூா் வாரணாசி’ என புகழ்கிறது தேவாரம். காசியும் அயோத்தியும் தமிழ்நாட்டுடன் தொடா்பு கொண்ட பண்பாட்டு பொக்கிஷங்களாக உள்ளன.