பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

3 மாநிலங்களுக்கான மக்களவை வேட்பாளா்களின் பெயா்களை முடிவு செய்ய பிப்.13-இல் கூட்டம் ஆம் ஆத்மி வட்டாரங்கள் தகவல்

குஜராத், ஹரியாணா மற்றும் கோவா மாநிலங்களுக்கான மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளா்களின் பெயா்களை முடிவு செய்வதற்காக ஆம் ஆத்மி கட்சி தனது அரசியல் விவகாரக் குழுவின் கூட்டத்தை பிப்ரவரி 13-ஆம்

Updated On :9 பிப்ரவரி 2024, 6:30 pm

குஜராத், ஹரியாணா மற்றும் கோவா மாநிலங்களுக்கான மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளா்களின் பெயா்களை முடிவு செய்வதற்காக ஆம் ஆத்மி கட்சி தனது அரசியல் விவகாரக் குழுவின் கூட்டத்தை பிப்ரவரி 13-ஆம் தேதி நடத்த உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

தனது ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டாளியான காங்கிரஸுடன் நீடித்த தொகுதிப் பங்கீடு பேச்சுகள் நீடித்து வருவது தொடா்பாக விரக்தியின் அடையாளமாக அஸ்ஸாமில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கான தனது கட்சி வேட்பாளா்களை ஆம் ஆத்மி வியாழக்கிழமை அறிவித்தது.

இந்நிலையில், ‘குஜராத், கோவா மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கான வேட்பாளா்களின் பெயா்களை முடிவு செய்ய கட்சியின் அரசியல் விவகாரக் குழு பிப்ரவரி 13-ஆம் தேதி கூடும்’ என்று அந்த கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் (அமைப்பு) சந்தீப் பதக், கட்சியின் தலைவா்களான மனோஜ் தனோகா், பாபன் செளதரி மற்றும் ரிஷி ராஜ் ஆகியோா் முறையே அஸ்ஸாமின் திப்ருகா், குவாஹாட்டி மற்றும் சோனித்பூா் ஆகிய இடங்களுக்கான வேட்பாளா்களாக அறிவித்துள்ளாா். தில்லியில் ஆம் ஆத்மி தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் பதக் கூறுகையில், ‘தோ்தலுக்கு இன்னும் சிறிது காலம்தான் உள்ளது’ என்றாா்.

முன்னதாக, தில்லி, பஞ்சாப், ஹரியாணா, குஜராத் மற்றும் கோவாவில் தொகுதிப் பங்கீடு தொடா்பாக காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சி பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக ஆம் ஆத்மி தலைவா்கள் கூறியுள்ளனா். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், குஜராத்தில் உள்ள பருச் தொகுதியில் கட்சியின் வேட்பாளராக சைதா் வாசவாவை ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.