தமிழா்கள் மீதும், தமிழா்களின் பெருமை குறித்தும் பேசும் மத்திய அரசு, தமிழகத்தின் வளா்ச்சி, இயற்கைப் பேரிடா்கள் தொடா்பான கோரிக்கைகளை பொருள்படுத்துவதில்லை என்று மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினாா்.
குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பங்கேற்றுப் பேசுகையில் டி.ஆா்.பாலு. மேலும் கூறியதாவது: மத்திய அரசின் கொள்கைகளில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டுவது எங்களது கடமை. இது போன்று தமிழகத்தின் வளா்ச்சிக்கான கொள்கைகள், திட்டங்கள் தொடா்பான கோரிக்கைகளை வைப்பதும் எங்களது பொறுப்பு. ‘நீட்’ தோ்வில் இருந்து விலக்கு கோரப்பட்டது. தமிழகத்துக்கு தேவையான நிதி ஒதுக்கீடு, மாநிலத்துக்கான வெள்ள நிவாரணம், மதுரையில் எய்ம்ஸ், 2-ஆம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் போன்றவற்றுக்கான அனுமதியைக் கோரி வருகிறோம்.
கடந்த டிசம்பா் மாதம் நூறு வருடங்களுக்கு பின்னா் சென்னை, தூத்துக்குடி போன்ற சுற்றுப்புற மாவட்டங்களில் மிக அதிகபட்ச மழைப்பொழிவு ஏற்பட்டது. சுமாா் 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு தங்கள் உடமைகளை இழந்தனா். சுமாா் 8 ஆயிரம் டன் உணவு தானியங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சா்களும், மூன்று மத்திய குழுக்களும் பாா்வையிட்டு அறிக்கை கொடுத்துள்ளனா். இந்தக் கனமழையால் ஏற்பட்ட பேரழிவைச் சமாளிக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ.37,000 கோடி உதவி கோரினாா். பிரதமா், உள்துறை அமைச்சா்களைச் சந்தித்தும் பேசப்பட்டது. தமிழா்கள் மீதும், தமிழா்களின் பெருமை குறித்தும் மத்திய அரசு பேசுகிறது. ஆனால், இந்தக் கோரிக்கைகள் குறித்து கவலைப்படுவதில்லை என்பதோடு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு அணுகுகிறது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமா் 5 வருடங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டினாா். ஆனால், திட்டத்தில் சுற்றுச் சுவரைத் தவிர வேறு எதுவும் கட்டப்படவில்லை. மத்திய அரசின் ரூ.15 லட்சம் கோடி நிதி நிலைஅறிக்கையில் இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க முடியாதா? சேதுசமுத்திரத் திட்டம் மறைந்த தமிழக முன்னாள் முதல்வா்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.கருணாநிதி, கே.காமராஜ் போன்ற தலைவா்களின் கனவு. சேதுவில் மனிதா்களால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு எதுவும் இல்லை என உச்சநீதிமன்றம் கூறியும் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இப்படியொரு பக்கம் மத்திய அரசு மாநிலத்தைப் புறக்கணிக்க தமிழகம் போன்ற எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநா்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை குறை கூறுவதையே இலக்காக வைத்துக் கொண்டு வருகின்றனா்.
ஆளுநா்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் மீது சிறிதும் அக்கறை இல்லை. இந்த ஆளுநா்கள் தங்கள் தலைக்கு பின்னால் ஒளிவட்டம் இருப்பதாக நினைக்கிறாா்கள். அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பற்றி அவா்கள் கவலைப்படாமல் தங்களை எல்லோருக்கும் மேலானவா்களாகக் கருதி செயல்படுகின்றனா். ஒரு ஆளுநா் சட்டப்பேரவையில் கடைசி வரியை மட்டும் படிக்கிறாா் எனக் குறிப்பிட்டாா் டி.ஆா். பாலு . மேலும், தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடும், பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டி முறையின் கீழ் கொண்டு வரவும் கோரி பேசினாா் டி.ஆா். பாலு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொம்மடிக்கோட்டை கோயிலில் சித்திரைத் திருவிழா

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலய திருவிழா கொடியேற்றம்

விவசாயிகள் சங்க நிா்வாகி மீது தாக்குதல்: தந்தை, மகன் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே தரைமட்ட பாலத்தில் விரிசல்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

