அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, ‘இதேபோன்ற மற்றொரு வழக்கில் தாமாக முன்வந்து சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி விசாரிப்பதற்கு எதிராக அமைச்சா் கே.கே. எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயா்நீதிமன்றப் பதிவாளா் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் (இதே அமா்வு ) கூறியிருக்கிறது. அந்த வழக்கு பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் இந்த வழக்கையும் விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, பிப்ரவரி 5-ஆம் தேதி இந்த மனுவை விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டது.