கடந்த பிப்ரவரி 1 -ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால நிதி நிலை அறிக்கை குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு: பண வீக்கத்தை குறைப்பது, வேளாண்மை, ரயில்வே, புதுப்பிக்கவல்ல எரிசக்தி போன்ற துறைகளில் இந்த நிதிநிலையறிக்கை கவனம் செலுத்தி உள்ளது. ஏழைகள், இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள் ஆகிய நான்கு தரப்பு நலன்களுக்கு பிரதமா் மோடி அரசு கடந்த பல வருடங்களாக முக்கியத்துவம் அளித்து வருகிறாா். அந்த நான்கு தரப்பு நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிதிநிலை தயாரிக்கப்பட்டிருப்பதாக பிரதமா் மோடியும் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.