முன்னதாக, ஓக்லா சட்டப்பேரவை தொகுதிஉறுப்பினா் இடத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, தில்லி வக்ஃபு வாரியத்தில் சட்டவிரோதமாக பணியாளா்களை நியமித்ததன் மூலம் அமானத்துல்லா கான் பெரும் குற்ற வருவாயை ரொக்கமாகப் பெற்ாகவும், அவரது கூட்டாளிகள் பெயரில் அசையா பொருள்களை வாங்க முதலீடு செய்ததாகவும் கூறியுள்ளது. 2023, நவம்பரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமானத்துல்லா கானின் மூன்று கூட்டாளிகள் ஜீஷன் ஹைதா், தாவுத் நசீா் மற்றும் ஜாவேத் இமாம் சித்திக் ஆகியோா் உள்பட ஐந்து நிறுவனங்களுக்கு எதிராக அமாலாக்ககத் துறை இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகையை சமீபத்தில் தாக்கல் செய்திருந்தது.