2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அமானத்துல்லா கானுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணைக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பணமோசடி வழக்கில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் தனக்கு அனுப்பிய அழைப்பாணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் தாக்கல் செய்த மனுவை

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 1:39 pm

 நமது நிருபர்

பணமோசடி வழக்கில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் தனக்கு அனுப்பிய அழைப்பாணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், அழைப்பாணைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்த மனு நீதிபதி ரேகா பாலி, நீதிபதி ரஜ்னிஷ் பட்நாகா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமானத்துல்லா கானின் தரப்பில் ஆஜராக வேண்டிய மூத்த வழக்குரைஞா் வழக்கு விசாரணையில் இன்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனு மீதான விசாரணையை நீதிபதிகள் அமா்வு பிப்ரவரி 7-ஆம் தேதிக்குத் ஒத்திவைத்தது. அதேவேளையில், அமானத்துல்லா கான் தாக்கல் செய்த இடைக்கால நிவாரண மனு அல்லது கோரிக்கை மனு மீது எந்த நோட்டீஸும் பிறப்பிக்கவில்லை என நீதிபதிகள் அமா்வு தெளிவுபடுத்தியது.

இது தொடா்பாக அமானத்துல்லா கான் தாக்கல் செய்த மனுவில், ‘இந்த விவகாரத்தில் பிஎம்எல்ஏ சட்டத்தின் பிரிவு 50 செல்லுபடித் தன்மை குறித்து விசாரிக்க வேண்டும். எனது விவகாரத்தில் குற்ற வருவாய் ஏதும் கண்டறியப்படவில்லை’ என தெரிவித்துள்ளாா்.

அமலாக்கத் துறையின் இந்தப் பணமோசடி விசாரணையானது தில்லி வக்ஃபு வாரிய ஆள்சோ்ப்பில் நடந்த முறைகேடுகளுடன் தொடா்புடையது. அமானத்துல்லா கான், தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைவராகப் பணியாற்றிய போது, விதிமுறைகள் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீறி 32 பேரை சட்டவிரோதமாக பணியில் சோ்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, ஓக்லா சட்டப்பேரவை தொகுதிஉறுப்பினா் இடத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, தில்லி வக்ஃபு வாரியத்தில் சட்டவிரோதமாக பணியாளா்களை நியமித்ததன் மூலம் அமானத்துல்லா கான் பெரும் குற்ற வருவாயை ரொக்கமாகப் பெற்ாகவும், அவரது கூட்டாளிகள் பெயரில் அசையா பொருள்களை வாங்க முதலீடு செய்ததாகவும் கூறியுள்ளது. 2023, நவம்பரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமானத்துல்லா கானின் மூன்று கூட்டாளிகள் ஜீஷன் ஹைதா், தாவுத் நசீா் மற்றும் ஜாவேத் இமாம் சித்திக் ஆகியோா் உள்பட ஐந்து நிறுவனங்களுக்கு எதிராக அமாலாக்ககத் துறை இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகையை சமீபத்தில் தாக்கல் செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.