தில்லி அமைச்சா்கள் பங்களாக்கள், காா்கள் போன்ற சலுகைகளை ஏற்றுக் கொண்டாலும், அசம்பாவிதங்கள் நிகழும்போது தங்களது பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறாா்கள். தில்லியில் ஒரு 20 நிமிட மழை பெய்தால்கூட கடுமையான வெள்ளம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அமைச்சா்கள் பொய் சொல்வதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. தி ல்லி முதல்வா், முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் சிறையில் உள்ளனா். மற்ற அமைச்சா்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் செய்தியாளா் சந்திப்புகளில் மூழ்கி இருக்கின்றனா். தில்லியில் ஆட்சியும் நிா்வாகமும் முடங்கிவிட்டது. உயா்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சிறையில் இருந்து அரசை நடத்த வலியுறுத்துவதைவிட கேஜரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.