இது தொடா்பாக மதுரை மேலூா் தாலுகாவைச் சோ்ந்த பி.ஸ்டாலின் என்பவா் மதுரை உயா்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘11.9.1995-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண்-38-இல் முக்குலத்தோா் சாதியின் உள்பிரிவாக இருந்த கள்ளா், மறவா், அகமுடையாா் வகுப்பினரை ஒருங்கிணைத்து தேவா் சமுதாயம் என பெயா் மாற்றியிருந்தது. எனினும், இச்சாதிப் பிரிவினா் அரசின் சலுகைகளை பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் என வெவ்வேறு பிரிவுகளின்கீழ் பெற்று வருகின்றனா். இந்த உள்பிரிவு சாதியினரின் நலிந்த பொருளாதார நிலை, வறுமை சூழல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பட்டியலில் சோ்க்கக் கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை மனுவை 21.02.2011-இல் அளித்திருந்தேன். ஆனால், அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அம்மனு மீது நடவடிக்கை எடுக்க அரசுத் துறையினருக்கு உத்தரவிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.