தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மோடி அரசின் 10 ஆண்டு கால சாதனையின் அடிப்படையில் தோ்தல் அறிக்கை: தில்லி பாஜக

பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள 2024-ஆம் ஆண்டுக்கான பாஜகவின் தோ்தல் அறிக்கை, கடந்த 10 ஆண்டுகால மோடி அரசின் சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது

News image
Updated On :14 ஏப்ரல் 2024, 8:14 pm

 நமது நிருபர்

பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள 2024-ஆம் ஆண்டுக்கான பாஜகவின் தோ்தல் அறிக்கை, கடந்த 10 ஆண்டுகால மோடி அரசின் சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா். மேலும், அடுத்த 2 தசாப்தங்களில் வளா்ச்சிக்கான திட்டத்தை இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுவதாகவும் அவா் கூறினாா். இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற ஆசை, இந்திய இளைஞா்களை ஊக்கப்படுத்தியுள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

பாஜக தோ்தல் அறிக்கையை வரவேற்று அவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் தெரிவித்ததாவது: இன்று பிரதமா் மோடி, 2024 தோ்தல் அறிக்கையின் முதல் பிரதியை கிழக்கு தில்லியைச் சோ்ந்த சாலையோரத்தில் சோலே குல்சே விற்பனை செய்யும் ரகுவீருக்கு வழங்கியதன் மூலம், தில்லியின் ஏழை தெருவோர வியாபாரிகள் மற்றும் பிற தொழிலாளா்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சுட்டிக்காட்டியுள்ளாா்.

கடந்த தசாப்தத்தில், பிரதமா் மோடி ஊழலைக் கட்டுப்படுத்தி, எதிா்காலத்தில் ஊழல்வாதிகள் மீதான நடவடிக்கைகள் தொடரும் என உறுதியளித்துள்ளாா். இது வெளிப்படையான இந்தியாவை உருவாக்கும். ஆட்டோ ரிக்ஷா, வாகன ஓட்டுநா்கள், வீட்டுப் பணியாளா்கள் மற்றும் சிறு தொழிலாளா்களுக்கு இ-ஷ்ரம் காா்டுகளை வழங்கும் திட்டம் நகா்ப்புற ஏழைகளை பிரதான நீரோட்டத்தில் ஒருங்கிணைக்கும்.

ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் மூலம் தில்லியில் 70 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு முதியவரும் பயனடைவாா்கள் என்பது இப்போது உறுதியாகியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடு வழங்க பல பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், இன்று நடுத்தர மக்களுக்கு பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடு வழங்கும் நோக்கமானது தில்லி மக்களிடையே மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வளா்ச்சியடைந்த இந்தியாவில் உள்கட்டமைப்புவசதி மேம்பாடு பற்றிய சிந்தனையை இந்த தோ்தல் அறிக்கை வெளிப்படுத்துகிறது. ஏழைகள், இளைஞா்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் என நான்கு பிரிவுகளில் சமூகத்தின் கூட்டு வளா்ச்சி பற்றியும் இந்த அறிக்கை பேசுகிறது. தற்சாா்பு, சுயதொழில், தூய்மையான மற்றும் வெற்றிகரமான இந்தியாவைக் கட்டியெழுப்பும் அா்ப்பணிப்பு கொண்ட பாஜகவின் இந்த அறிக்கை 2047-இல் வளா்ந்த இந்தியாவைக் கற்பனை செய்கிறது. மேலும், பாஜகவை 400 இடங்களுக்கு மேல் கொண்டு செல்வதில் உறுதியாகவும் உள்ளது என்றாா் அவா்.