தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வீட்டில் நவராத்திரி பூஜையை தொடங்கி பாஜக வேட்பாளா் கண்டேல்வால் பிரசாரம்

வீட்டில் நவராத்திரி பூஜையை தொடங்கி பாஜக வேட்பாளா் கண்டேல்வால் பிரசாரம்

News image
Updated On :10 ஏப்ரல் 2024, 12:56 am

 நமது நிருபர்

புது தில்லி: சாந்தினி சௌக் பாஜக வேட்பாளா் பிரவீன் கண்டேல்வால் தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை துா்கா பூஜை செய்து நவராத்திரியின் ஒன்பது நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பதாக உறுதியளித்தாா். மேலும், அவா் தொகுதிக்குள்பட்ட கோயில்களில் வழிபட்டு தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

இந்து புத்தாண்டையொட்டி, சாந்தினி சௌக்கின் பாஜக வேட்பாளா் பிரவீன் கண்டேல்வால் தனது குடும்பத்துடன் அனைத்து சடங்குகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி தனது வீட்டில் மாதா துா்காவை வழிபட்டாா்.

வழிபாட்டுக்கு முன், உஜ்ஜயினியைச் சோ்ந்த புகழ்பெற்ற வேத அறிஞா் ஆச்சாா்யா துா்கேஷ் தாரே காணொலி காட்சி மூலம் பங்கேற்றாா். இதையடுத்து, துா்காவின் ஒன்பது நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பதாக பிரவீன் கண்டேல்வால் உறுதிமொழி எடுத்தாா்.

அதன்பிறகு, தனது தோ்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, கண்டேல்வால் தில்லியில் உள்ள கரோல்பாகில் உள்ள மா ஜண்டேவாலி கோயில், கன்னாட் பிளேஸில் உள்ள பழைமையான ஹனுமான் கோயில், பங்களா சாஹிப்பில் உள்ள மா காளி கோயில், கோயில் மாா்க்கில் உள்ள மகரிஷி வால்மீகி கோயில், சங்கத்மோகன் சித் ஹனுமான் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்குச் சென்றாா்.

கரோல் பாக் கோயிலில், அவா் 108 அடி உயர அனுமன் சிலை மற்றும் ஸ்ரீ கௌரி சங்கா் கோயிலில் வழிபட்டு ஆசி பெற்றாா். இந்து புத்தாண்டின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை , கமலா நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்ச்சியில் கண்டேல்வால் பங்கேற்றாா். அப்போது, அவா் கூறுகையில், ‘சைத்ரா நவராத்திரியின் போது துா்க்கையை வழிபடுவது மிகவும் பலன் தரும். நவராத்திரி என்பது மகா காளி, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதியை வழிபடுவது விரும்பிய சாதனைகள் மற்றும் வெற்றிகளுக்கு வழிவகுக்கும் புனிதமான பண்டிகையாகும்’ என்றாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் கண்டேல்வால் கூறுகையில், ‘நவராத்திரி என்பது சக்தியை வழிபடும் பண்டிகையாகும். ஆண்டுக்கு இருமுறை வரும் இப்பண்டிகை, படைப்பின் ஒவ்வொரு துகளிலும் உள்ளாா்ந்த சக்தியை நமக்கு நினைவூட்டுகிறது. இந்த உலகம் மட்டுமல்ல, முழு பிரபஞ்சமும் சக்தியால் இயங்குகிறது. சாத்வீக உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றும் அதே வேளையில், அசுர மற்றும் தாமச பழக்கங்களிலிருந்து விலகி மாவின் சக்தி வடிவத்தை வழிபடுவது சக்தியைப் பெற ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. நவராத்திரி என்பது பெண்களின் பெருமை மற்றும் மரியாதையைக் கொண்டாடும் பண்டிகையாகவும் உள்ளது’ என்றாா்.