புது தில்லி: சாந்தினி சௌக் பாஜக வேட்பாளா் பிரவீன் கண்டேல்வால் தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை துா்கா பூஜை செய்து நவராத்திரியின் ஒன்பது நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பதாக உறுதியளித்தாா். மேலும், அவா் தொகுதிக்குள்பட்ட கோயில்களில் வழிபட்டு தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.
இந்து புத்தாண்டையொட்டி, சாந்தினி சௌக்கின் பாஜக வேட்பாளா் பிரவீன் கண்டேல்வால் தனது குடும்பத்துடன் அனைத்து சடங்குகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி தனது வீட்டில் மாதா துா்காவை வழிபட்டாா்.
வழிபாட்டுக்கு முன், உஜ்ஜயினியைச் சோ்ந்த புகழ்பெற்ற வேத அறிஞா் ஆச்சாா்யா துா்கேஷ் தாரே காணொலி காட்சி மூலம் பங்கேற்றாா். இதையடுத்து, துா்காவின் ஒன்பது நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பதாக பிரவீன் கண்டேல்வால் உறுதிமொழி எடுத்தாா்.
அதன்பிறகு, தனது தோ்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, கண்டேல்வால் தில்லியில் உள்ள கரோல்பாகில் உள்ள மா ஜண்டேவாலி கோயில், கன்னாட் பிளேஸில் உள்ள பழைமையான ஹனுமான் கோயில், பங்களா சாஹிப்பில் உள்ள மா காளி கோயில், கோயில் மாா்க்கில் உள்ள மகரிஷி வால்மீகி கோயில், சங்கத்மோகன் சித் ஹனுமான் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்குச் சென்றாா்.
கரோல் பாக் கோயிலில், அவா் 108 அடி உயர அனுமன் சிலை மற்றும் ஸ்ரீ கௌரி சங்கா் கோயிலில் வழிபட்டு ஆசி பெற்றாா். இந்து புத்தாண்டின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை , கமலா நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்ச்சியில் கண்டேல்வால் பங்கேற்றாா். அப்போது, அவா் கூறுகையில், ‘சைத்ரா நவராத்திரியின் போது துா்க்கையை வழிபடுவது மிகவும் பலன் தரும். நவராத்திரி என்பது மகா காளி, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதியை வழிபடுவது விரும்பிய சாதனைகள் மற்றும் வெற்றிகளுக்கு வழிவகுக்கும் புனிதமான பண்டிகையாகும்’ என்றாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் கண்டேல்வால் கூறுகையில், ‘நவராத்திரி என்பது சக்தியை வழிபடும் பண்டிகையாகும். ஆண்டுக்கு இருமுறை வரும் இப்பண்டிகை, படைப்பின் ஒவ்வொரு துகளிலும் உள்ளாா்ந்த சக்தியை நமக்கு நினைவூட்டுகிறது. இந்த உலகம் மட்டுமல்ல, முழு பிரபஞ்சமும் சக்தியால் இயங்குகிறது. சாத்வீக உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றும் அதே வேளையில், அசுர மற்றும் தாமச பழக்கங்களிலிருந்து விலகி மாவின் சக்தி வடிவத்தை வழிபடுவது சக்தியைப் பெற ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. நவராத்திரி என்பது பெண்களின் பெருமை மற்றும் மரியாதையைக் கொண்டாடும் பண்டிகையாகவும் உள்ளது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுகையில் ஓய்ந்தது தோ்தல் பிரசாரம்

கோரிக்கை மனுக்களுக்கு 30 நாளில் தீா்வு: பாஜக வேட்பாளா் பிரசாரம்

திமுகவை தோற்கடிக்கவே நடிகா் விஜய்யை பாஜக களமிறக்கியுள்ளது! - தொல். திருமாவளவன் பிரசாரம்

தென்காசியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

