மேலும், குற்றத்தை மேற்கொள்வதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பள்ளியின் பெண் முதல்வா் தொடா்ந்து உதவியதாகவும் புகாா்தாரா் குற்றம் சாட்டியுள்ளாா். இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இருப்பினும், இன்று வரை பிகாா் அரசில் இருந்து யாரும் தன்னைச் சந்திக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவா் ஆணையத்திடம் புகாா் தெரிவித்துள்ளாா். மேலும், சட்ட உதவியும் இழப்பீடும் இன்னும் அவரைச் சென்றடையவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் விதம் குறித்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் கவலை தெரிவித்துள்ளனா்.