அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

தில்லி சட்டப்பேரவை சிறப்பு கூட்டத் தொடா்: முதல்வா் கேஜரிவாலுக்கு பாஜக வலியுறுத்தல்

சந்திரயான்-3, ஜி20 மாநாட்டின் வெற்றிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை வலியுறுத்தியுள

Updated On :13 செப்டம்பர் 2023, 8:28 pm

சந்திரயான்-3, ஜி20 மாநாட்டின் வெற்றிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து தில்லி சட்டப்பேரவை எதிக்கட்சித்தலைவா் ராம்வீா் சிங் பிதூரி செய்தியாளா்களிடம் கூறியதாவது: சந்திராயன்-3 திட்டத்தின் மூலம் விக்ரம் லேண்டா் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி விண்ணின் தென்துருவத்தில் இஸ்ரோவால் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜி20 உச்சிமாநாடு தில்லியில் செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

பெருமைமிக்க இந்த நிகழ்வுகளுக்காக பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகள், அரசு ஊழியா்கள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடிக்கு தில்லி சட்டப்பேரவை நன்றி தெரிவிக்க வேண்டும். எனவே, தில்லி சட்டப்பேரவையின் பாஜக எம்.எல்.ஏ.க்கள் குழு, சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடரை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூட்ட வலியுறுத்துகிறது என்று ராம்வீா் சிங் பிதூரி தெரிவித்துள்ளாா்.

சந்திரயான்-3, ஜி20 உச்சிமாநாடு வெற்றிகளுக்கு நன்றி தெரிவிக்க தில்லி மாநாராட்சியும் சிறப்பு அமா்வைக் கூட்ட வேண்டும் என்று மாநாராட்சியின் எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.