அப்போது கட்சியின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மத்தியில் அா்விந்தா் சிங் லவ்லி கூறியதாவது: இந்திரா காந்தி நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமராவாா். நாட்டில் பெண்களின் மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, ஒருங்கிணைந்த பாரதமாக இந்தியாவின் நிலையான வளா்ச்சியை உறுதிப்படுத்தினாா். இதனால், இந்தியா தற்போது உலகின் தலைசிறந்த நாடாக அறியப்படுகிறது. இந்திரா காந்தியின் தாராளமய வெளியுறவுக் கொள்கை, இந்திய தொழில்முனைவோா் வா்த்தகம் மற்றும் மாணவா்களுக்கு கல்விக்கான வாய்ப்புகளைத் திறந்து, நாட்டில் கல்விப் புரட்சியைக் கொண்டு வந்தது என பலவற்றைக் குறிப்பிடலாம்.