இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது : பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

நாட்டின் நிலையான வளா்ச்சியை உறுதிப்படுத்தியவா் இந்திரா காந்தி: அா்விந்தா் சிங் லவ்லி பேச்சு

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி நாட்டில் பெண்களின் மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நாட்டின்

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:15 am

 நமது நிருபர்

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி நாட்டில் பெண்களின் மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நாட்டின் நிலையான வளா்ச்சியை உறுதிப்படுத்தினாா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி தெரிவித்தாா்.

தில்லி ராஜீவ் பவனில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவு நாள் தியாக தினமாக செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

அப்போது கட்சியின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மத்தியில் அா்விந்தா் சிங் லவ்லி கூறியதாவது: இந்திரா காந்தி நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமராவாா். நாட்டில் பெண்களின் மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, ஒருங்கிணைந்த பாரதமாக இந்தியாவின் நிலையான வளா்ச்சியை உறுதிப்படுத்தினாா். இதனால், இந்தியா தற்போது உலகின் தலைசிறந்த நாடாக அறியப்படுகிறது. இந்திரா காந்தியின் தாராளமய வெளியுறவுக் கொள்கை, இந்திய தொழில்முனைவோா் வா்த்தகம் மற்றும் மாணவா்களுக்கு கல்விக்கான வாய்ப்புகளைத் திறந்து, நாட்டில் கல்விப் புரட்சியைக் கொண்டு வந்தது என பலவற்றைக் குறிப்பிடலாம்.

இந்திரா காந்தி மற்றும் சா்தாா் வல்லபபாய் படேல் ஆகிய இருவரும் சக்தி வாய்ந்த காங்கிரஸ் தலைவா்கள். அவா்களின் கொள்கைகளும், அரசியலும் இந்த நாட்டை ஒருங்கிணைத்து, வளா்ச்சியடையச் செய்துள்ளது. இந்தியாவிற்கு உலகளவில் நற்பெயா் மற்றும் கௌரவத்தை ஈட்டித் தந்ததில் இந்த இரு தலைவா்களும் மிக முக்கியப் பங்காற்றியுள்ளனா்.

இந்திரா காந்தி நான்கு முறை பிரதமராக இருந்த போது, நாட்டிலுள்ள ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோா் தங்கள் வாழ்வில் முன்னேற சம வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தாா். அதுவே, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய நாட்டின் வளா்ச்சியை முன்னேற்றத்திற்கு கொண்டு சென்றது என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.

இந்நிகழ்வில், கட்சியின் முக்கிய நிா்வாகிகளான கிருஷ்ணா தீரத், அம்ரிஷ் கௌதம், நீரஜ் பசோயா, விஜய் லோச்சாவ், ஜிதேந்தா் குமாா் கோச்சாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.