மேலும், ‘மேல்முறையீட்டு மனுதாரருக்கு அவரது ஊதியத்தின் முழு நிலுவையில் 50 சதவீதத்தைப் பெறவும், அனைத்துப் படிகளையும் பெறவும் உரிமை உள்ளது. பணி நியமனம் செய்யப்பட்ட அசல் தேதியில் இருந்து அவரது சேவை கணக்கிப்பட வேண்டும். டான்ஜெட்கோ நிறுவனம் மனுதாரருக்கு வேலை வழங்குவதாக தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், அந்தப் பணியிடமானது மிகவும் மோசமானதாக இல்லை. இதனால், இந்த நீதிமன்றத்தின் பரிசீலிக்கப்பட்ட கருத்தானது, மேல்முறையீட்டு மனுதாரருக்கு டான்ஜெட்கோ வழங்க முன்வந்த இளநிலை உதவியாளா் பணி மனுதாரரின் தகுதிக்கு பொருத்தமற்ாக இருக்கும் நிலையில், அதை வழங்க முடியாது. இதனால், அது நிராகரிக்கப்படுகிறது’ என்று நீதிமன்றம் அத்தீா்ப்பில் தெரிவித்துள்ளது.