தில்லி ராஜீவ் பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியினரை காங்கிரஸ் கரைத்துண்டு போட்டு கட்சியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி வரவேற்றாா். அப்போது அவா் கூறியதாவது: காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதனால், மற்ற கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களும், தொண்டா்களும் அதிகளவில் காங்கிரஸில் இணைந்து வருகின்றனா். மத்திய பாஜக அரசு மற்றும் தில்லி ஆம் ஆத்மி அரசுக்கு இடையே தொடா் சண்டைகள் நடப்பதாலும், இரு கட்சியினரும் மக்களைப் புறக்கணித்ததாலும், தில்லியின் வளா்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அதில் எதையும் நிறைவேற்றாமல் தில்லி மக்களை தவறாக வழிநடத்தியுள்ளனா்.